• Sep 20 2024

யாழில் முன்னெடுக்கப்பட்ட சுயமரியாதை நடைபயணம்...! கனேடிய உயர்ஸ்தானிகர் பங்கேற்பு...!

Sharmi / Jun 8th 2024, 4:03 pm
image

Advertisement

சமத்துவம், சமூக நீதியை அடிப்படையாக கொண்டு சுயமரியாதை நடைபயணமொன்று யாழில் இன்று(08) காலை முன்னெடுக்கப்பட்டது.

யாழ் மத்திய பேருந்து நிலையத்தின் முன்பாக ஆரம்பமான குறித்த நடைபயணம், முதலில் சத்திரச் சந்தியை நோக்கி பயணித்து, பண்ணை வீதியூடாக  பொலிஸ் நிலைய வீதி, பொது நூலகம் முன்பாக சுயமரியாதை நடை பயணம் நிறைவடைந்தது.

சுயமரியாதை, சமத்துவம், சமூக நீதியை அடிப்படையாக கொண்டு ஏற்பாடு செய்யப்பட்ட சுயமரியாதை  நடைபயணத்தில்  பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை தாங்கியவாறு நடைபயண பேரணி முன்னெடுக்கப்பட்டது.

 குறித்த  நடைபயணத்தில் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வாஸ் உட்பட தூதரக அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.










யாழில் முன்னெடுக்கப்பட்ட சுயமரியாதை நடைபயணம். கனேடிய உயர்ஸ்தானிகர் பங்கேற்பு. சமத்துவம், சமூக நீதியை அடிப்படையாக கொண்டு சுயமரியாதை நடைபயணமொன்று யாழில் இன்று(08) காலை முன்னெடுக்கப்பட்டது.யாழ் மத்திய பேருந்து நிலையத்தின் முன்பாக ஆரம்பமான குறித்த நடைபயணம், முதலில் சத்திரச் சந்தியை நோக்கி பயணித்து, பண்ணை வீதியூடாக  பொலிஸ் நிலைய வீதி, பொது நூலகம் முன்பாக சுயமரியாதை நடை பயணம் நிறைவடைந்தது.சுயமரியாதை, சமத்துவம், சமூக நீதியை அடிப்படையாக கொண்டு ஏற்பாடு செய்யப்பட்ட சுயமரியாதை  நடைபயணத்தில்  பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை தாங்கியவாறு நடைபயண பேரணி முன்னெடுக்கப்பட்டது. குறித்த  நடைபயணத்தில் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வாஸ் உட்பட தூதரக அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement