• Oct 06 2024

அம்பாறையில் பாடசாலை மாணவர்களுக்கு ஐஸ் போதைப்பொருள் விற்பனை...! ஒருவர் கைது....!

Sharmi / May 20th 2024, 10:49 am
image

Advertisement

அம்பாறையில் பாடசாலை மாணவர்களுக்கு ஐஸ் போதைப் பொருட்களை சூட்சுமமாக விற்பனை செய்து வந்த 24 வயது சந்தேக நபரை  பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அம்பாறை பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நகர் புறத்தில் கடந்த சனிக்கிழமை(18) இரவு சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இளைஞரை பெரிய நீலாவணை பொலிஸார் சோதனை மேற்கொண்ட நிலையில் அவரிடமிருந்து 2 கிராம் 360 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளை மீட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர் பாடசாலை மாணவர்களுக்கு ஐஸ் போதைப் பொருட்களை சூட்சுமமாக விற்பனை செய்து வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் குறித்த சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,  சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேவேளை  சந்தேக நபர் தொடர்பில் பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜே.எஸ்.கே.வீரசிங்க வழிநடத்தலில் மேலதிக விசாரணைகளை  முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


அம்பாறையில் பாடசாலை மாணவர்களுக்கு ஐஸ் போதைப்பொருள் விற்பனை. ஒருவர் கைது. அம்பாறையில் பாடசாலை மாணவர்களுக்கு ஐஸ் போதைப் பொருட்களை சூட்சுமமாக விற்பனை செய்து வந்த 24 வயது சந்தேக நபரை  பொலிஸார் கைது செய்துள்ளனர்.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,அம்பாறை பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நகர் புறத்தில் கடந்த சனிக்கிழமை(18) இரவு சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இளைஞரை பெரிய நீலாவணை பொலிஸார் சோதனை மேற்கொண்ட நிலையில் அவரிடமிருந்து 2 கிராம் 360 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளை மீட்டுள்ளனர்.குறித்த சந்தேக நபர் பாடசாலை மாணவர்களுக்கு ஐஸ் போதைப் பொருட்களை சூட்சுமமாக விற்பனை செய்து வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில் குறித்த சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,  சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.அதேவேளை  சந்தேக நபர் தொடர்பில் பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜே.எஸ்.கே.வீரசிங்க வழிநடத்தலில் மேலதிக விசாரணைகளை  முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement