கொழும்பு - பம்பலப்பிட்டியில் விளையாட்டுப் பொருட்கள் விற்பனை நிலையத்திற்குள் புகுந்து ஊழியரின் கழுத்தை வெட்டிய கொள்ளையன் காற்று துப்பாக்கி ஒன்றை திருடிச் சென்ற சம்பவம் இன்று இடம்பெற்றிருக்கின்றது.
சம்பவத்தில் காயமடைந்த பணியாளர் கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
வர்த்தக நிலையத்துக்குச் சென்ற ஒரு நபர் தனக்கு ஏர் பிஸ்டல் வேண்டும் என ஊழியரிடம் கூறியுள்ளார்.
அதனை எடுப்பதற்காக வர்த்தக நிலையத்தின் இரண்டாவது மாடிக்கு ஊழியர் சென்றபோது அந்த நபர் திடீரென ஊழியரின் கழுத்தை கூரிய ஆயுதத்தால் அறுத்துள்ளார்.
அதன்பின்னர் அவரது கையிலிருந்த ஏர் பிஸ்டலை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் அந்த பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
கொழும்பு வர்த்தக நிலையமொன்றில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் -மக்களே அவதானம் கொழும்பு - பம்பலப்பிட்டியில் விளையாட்டுப் பொருட்கள் விற்பனை நிலையத்திற்குள் புகுந்து ஊழியரின் கழுத்தை வெட்டிய கொள்ளையன் காற்று துப்பாக்கி ஒன்றை திருடிச் சென்ற சம்பவம் இன்று இடம்பெற்றிருக்கின்றது.சம்பவத்தில் காயமடைந்த பணியாளர் கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.வர்த்தக நிலையத்துக்குச் சென்ற ஒரு நபர் தனக்கு ஏர் பிஸ்டல் வேண்டும் என ஊழியரிடம் கூறியுள்ளார்.அதனை எடுப்பதற்காக வர்த்தக நிலையத்தின் இரண்டாவது மாடிக்கு ஊழியர் சென்றபோது அந்த நபர் திடீரென ஊழியரின் கழுத்தை கூரிய ஆயுதத்தால் அறுத்துள்ளார்.அதன்பின்னர் அவரது கையிலிருந்த ஏர் பிஸ்டலை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் அந்த பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.