ஜப்பானுக்கும் தென் கொரியாவுக்கும் இடையிலான கடற்பரப்பில் மூழ்கிய கப்பலில் இருந்த 8 பேர் உயிரிழந்துள்ளனர் என சீனா இன்று தெரிவித்துள்ளது.
ஹொங்கொங்கில் பதிவுசெய்யப்பட்ட ஜின் டியான் எனும் சரக்குக் கப்பலிருந்து நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை இடர் சமிக்ஞைகள் அனுப்பப்பட்டன.பின்னர் அக்கப்பல் மூழ்கியது.
அக்கப்பலில் மொத்தம் 14 பேர் இருந்துள்ளனர்.
ஜப்பானிய மற்றும் தென் கொரிய கரையோரக் காவல் படையினரால் அவர்கள் மீட்கப்பட்டனர். மேலும் 8 பேர் காணாமல் போயிருந்த நிலையில் தேடப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், 8 பேர் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஜப்பானின் புகோகா நகரிலுள்ள சீனத் துணைத்தூதுவர் லூ குய்ஜுன் கூறியுள்ளார். உயிரிழந்தவர்களில் 6 பேர் சீனப் பிரஜைகள் எனவும் அவர் கூறியுள்ளார்.
கடலில் மூழ்கிய கப்பலில் இருந்த 6 சீனர்கள் உட்பட 8 பேருக்கு நேர்ந்த கதி ஜப்பானுக்கும் தென் கொரியாவுக்கும் இடையிலான கடற்பரப்பில் மூழ்கிய கப்பலில் இருந்த 8 பேர் உயிரிழந்துள்ளனர் என சீனா இன்று தெரிவித்துள்ளது.ஹொங்கொங்கில் பதிவுசெய்யப்பட்ட ஜின் டியான் எனும் சரக்குக் கப்பலிருந்து நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை இடர் சமிக்ஞைகள் அனுப்பப்பட்டன.பின்னர் அக்கப்பல் மூழ்கியது.அக்கப்பலில் மொத்தம் 14 பேர் இருந்துள்ளனர்.ஜப்பானிய மற்றும் தென் கொரிய கரையோரக் காவல் படையினரால் அவர்கள் மீட்கப்பட்டனர். மேலும் 8 பேர் காணாமல் போயிருந்த நிலையில் தேடப்பட்டு வந்தனர்.இந்நிலையில், 8 பேர் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஜப்பானின் புகோகா நகரிலுள்ள சீனத் துணைத்தூதுவர் லூ குய்ஜுன் கூறியுள்ளார். உயிரிழந்தவர்களில் 6 பேர் சீனப் பிரஜைகள் எனவும் அவர் கூறியுள்ளார்.