அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணம் பால்டிமோர் நகரில் மோர்கன் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் பல்கலைக்கழக வளாகத்தில் தங்கி படிக்கும் விடுதி மாணவர்களுக்கான சாப்பாடு பரிமாறும்போது இருதரப்பு மாணவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் வன்முறை அதிகரித்த நிலையில் மர்ம நபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட தொடங்கினார்.
இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 5 மாணவர்கள் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
அமெரிக்க பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு – 5 மாணவர்கள் காயம் samugammedia அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணம் பால்டிமோர் நகரில் மோர்கன் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் பல்கலைக்கழக வளாகத்தில் தங்கி படிக்கும் விடுதி மாணவர்களுக்கான சாப்பாடு பரிமாறும்போது இருதரப்பு மாணவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் வன்முறை அதிகரித்த நிலையில் மர்ம நபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட தொடங்கினார்.இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 5 மாணவர்கள் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.