ஹைதி நாட்டில் பல கிளர்ச்சி குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.
மக்களில் பலர் சுய பாதுகாப்பு குழுக்களில் தங்களை இணைத்து கொண்டு செயல்பட்டு வருகின்றனர். அவற்றில் வா காலே என்ற குழுவானது, பலரது நம்பிக்கையை பெற்றுள்ளது.
இந்நிலையில், அந்நாட்டின் கனான் என்ற புறநகர் பகுதியில் பாதிரியார் மார்க்கோ என்பவர் தலைமையில் பேரணி ஒன்று நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதுபற்றிய காணொளி சமூக வலைத்தளத்தில் வெளிவந்துள்ளன.அந்த மத குழுக்களுடன் தொடர்புடைய மஞ்சள் வண்ண சட்டைகளை அணிந்தபடி பலர் பேரணியாக சென்றனர்.
ஒரு சிலர் தங்களின் கைகளில் கம்புகள், ஆயுதங்கள் போன்றவற்றையும் ஏந்தியபடி சென்றனர். எனினும், திடீரென இயந்திர துப்பாக்கிகளுடன் பேரணிக்குள் புகுந்த கிளர்ச்சி குழுவானது, அதிரடியாக அவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியது.
இந்த சம்பவத்தில், 7 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்து உள்ளனர்.கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்லும் பலர் கடத்தப்பட்டும் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹைதியில் கிறிஸ்தவ மத பேரணியில் துப்பாக்கி சூடு; 7 பேர் உயிரிழப்பு samugammedia ஹைதி நாட்டில் பல கிளர்ச்சி குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.மக்களில் பலர் சுய பாதுகாப்பு குழுக்களில் தங்களை இணைத்து கொண்டு செயல்பட்டு வருகின்றனர். அவற்றில் வா காலே என்ற குழுவானது, பலரது நம்பிக்கையை பெற்றுள்ளது.இந்நிலையில், அந்நாட்டின் கனான் என்ற புறநகர் பகுதியில் பாதிரியார் மார்க்கோ என்பவர் தலைமையில் பேரணி ஒன்று நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.இதுபற்றிய காணொளி சமூக வலைத்தளத்தில் வெளிவந்துள்ளன.அந்த மத குழுக்களுடன் தொடர்புடைய மஞ்சள் வண்ண சட்டைகளை அணிந்தபடி பலர் பேரணியாக சென்றனர்.ஒரு சிலர் தங்களின் கைகளில் கம்புகள், ஆயுதங்கள் போன்றவற்றையும் ஏந்தியபடி சென்றனர். எனினும், திடீரென இயந்திர துப்பாக்கிகளுடன் பேரணிக்குள் புகுந்த கிளர்ச்சி குழுவானது, அதிரடியாக அவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியது.இந்த சம்பவத்தில், 7 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்து உள்ளனர்.கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்லும் பலர் கடத்தப்பட்டும் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.