• May 20 2024

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தி வவுனியாவில் கையெழுத்துப் போராட்டம்!

Sharmi / Jan 28th 2023, 11:48 am
image

Advertisement

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு,  தமிழ், முஸ்லிம், சிங்கள அரசியல் கைதிகளை விடுதலை செய் எனத் தெரிவித்து கையெழுத்துப் பெறும் போராட்டம் வவுனியாவில் இன்று இடம்பெற்றது.

வடமாகாண மக்கள் திட்டவரைபு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வவுனியா பழைய பேரூந்து நிலையம் முன்பாக குறித்த கையெழுத்து பெறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

அதில் 'வசந்தவுக்காக ஒரு வாக்கு மூலம், பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு, தமிழ்- முஸ்லிம்- சிங்கள அரசியல் கைதிகளை விடுதலை செய், போராட்டத்தில் ஈடுபட்டமையால் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர் பேரவை ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்டோரை விடுதலை செய்' எனவும் வலியுறுத்தி கையெழுத்துப் பெறப்பட்டது.

இதில் இன, மத பேதங்களைக் கடந்து பலரும் வருகை தந்து கையெழுத்திட்டமை குறிப்பிடத்தக்கது.



பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தி வவுனியாவில் கையெழுத்துப் போராட்டம் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு,  தமிழ், முஸ்லிம், சிங்கள அரசியல் கைதிகளை விடுதலை செய் எனத் தெரிவித்து கையெழுத்துப் பெறும் போராட்டம் வவுனியாவில் இன்று இடம்பெற்றது.வடமாகாண மக்கள் திட்டவரைபு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வவுனியா பழைய பேரூந்து நிலையம் முன்பாக குறித்த கையெழுத்து பெறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.அதில் 'வசந்தவுக்காக ஒரு வாக்கு மூலம், பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு, தமிழ்- முஸ்லிம்- சிங்கள அரசியல் கைதிகளை விடுதலை செய், போராட்டத்தில் ஈடுபட்டமையால் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர் பேரவை ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்டோரை விடுதலை செய்' எனவும் வலியுறுத்தி கையெழுத்துப் பெறப்பட்டது.இதில் இன, மத பேதங்களைக் கடந்து பலரும் வருகை தந்து கையெழுத்திட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement