• Oct 18 2024

பாடகர் வேல்முருகன் கைதுசெய்யப்பட்டு விடுதலை - சென்னையில் சம்பவம்

Tharun / May 13th 2024, 5:59 pm
image

Advertisement

சென்னை மெட்ரோ  புகையிரத  அதிகாரியை தாக்கிய குற்றச்சாட்டில்  பின்னணிப் பாடகர் வேல்முருகன் கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்டுள்ளாா். சென்னை வடபழனி விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மெட்ரோ  புகையிரத பணிகள் நடைபெற்று வருகின்றதனால்  அந்த பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில்  வளசரவாக்கம் – ஆற்காடு சாலையில் மெட்ரோ  புகையிரத   பணி நடைபெறுவதால் மெட்ரோ ஊழியர்கள் தடுப்பு அமைத்து வாகனங்கள் மாற்றி செல்ல ஒரு வழிப்பாதையாக அமைத்துள்ளனர். இவ்வாறு   சாலை அடைக்கப்பட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்த வளசரவாக்கம் ஆற்காடு சாலை நோக்கி பிரபல பின்னணி பாடகர் வேல்முருகன் நேற்று முன்தினம் மாலை தனது காரில் சென்ற போது எந்த வித முன்னறிவிப்புமின்றி சாலையை மூடி வேலை செய்வதாக மெட்ரோ பணி ஊழியர்களிடம்    வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

பின்னர் இது குறித்து கேட்க வந்த மெட்ரோ திட்ட உதவி மேலாளர் வடிவேல் என்பவரை வேல்முருகன் அவதுறான வார்த்தையால் திட்டியும், தாக்கியதாகவும் இந்த மோதலில் காயமடைந்த வடிவேல் அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின் வீடு திரும்பிய நிலையில்   விருகம்பாக்கம்  காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தாா்.

இந்த சம்பவம் குறித்து     தீவிர விசாரணை மேற்கொண்டதில்   விருகம்பாக்கம்  காவல்துறையினரால்  வேல்முருகன் கைது செய்யப்பட்டு பின்னா் எச்சாித்து விடுவிக்கப்பட்டுள்ளார்.


பாடகர் வேல்முருகன் கைதுசெய்யப்பட்டு விடுதலை - சென்னையில் சம்பவம் சென்னை மெட்ரோ  புகையிரத  அதிகாரியை தாக்கிய குற்றச்சாட்டில்  பின்னணிப் பாடகர் வேல்முருகன் கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்டுள்ளாா். சென்னை வடபழனி விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மெட்ரோ  புகையிரத பணிகள் நடைபெற்று வருகின்றதனால்  அந்த பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இந்தநிலையில்  வளசரவாக்கம் – ஆற்காடு சாலையில் மெட்ரோ  புகையிரத   பணி நடைபெறுவதால் மெட்ரோ ஊழியர்கள் தடுப்பு அமைத்து வாகனங்கள் மாற்றி செல்ல ஒரு வழிப்பாதையாக அமைத்துள்ளனர். இவ்வாறு   சாலை அடைக்கப்பட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்த வளசரவாக்கம் ஆற்காடு சாலை நோக்கி பிரபல பின்னணி பாடகர் வேல்முருகன் நேற்று முன்தினம் மாலை தனது காரில் சென்ற போது எந்த வித முன்னறிவிப்புமின்றி சாலையை மூடி வேலை செய்வதாக மெட்ரோ பணி ஊழியர்களிடம்    வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.பின்னர் இது குறித்து கேட்க வந்த மெட்ரோ திட்ட உதவி மேலாளர் வடிவேல் என்பவரை வேல்முருகன் அவதுறான வார்த்தையால் திட்டியும், தாக்கியதாகவும் இந்த மோதலில் காயமடைந்த வடிவேல் அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின் வீடு திரும்பிய நிலையில்   விருகம்பாக்கம்  காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தாா்.இந்த சம்பவம் குறித்து     தீவிர விசாரணை மேற்கொண்டதில்   விருகம்பாக்கம்  காவல்துறையினரால்  வேல்முருகன் கைது செய்யப்பட்டு பின்னா் எச்சாித்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement