ஆறு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் யாழில் நேற்று உயிரிழந்துள்ளார்.
வாடி ஒழுங்கை வல்வெட்டித்துறையைச் சேர்ந்த சிவரூபன் கேனுசா (வயது- 24) என்கிற ஒரு பிள்ளையின் தாயான இளம் குடும்பப் பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,,,
குறித்த பெண்ணுக்கு கடந்த ஆறாம் திகதி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார். இருந்தும் காய்ச்சல் குறையாத நிலையில் கடந்த 9 ஆம் திகதி வல்வெட்டித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று (11) பிற்பகல் உயிரிழந்தார்.
குறித்த மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரணவிசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார்.
ஆறு நாள் காய்ச்சல் - யாழில் இளம் குடும்பப் பெண் உயிரிழப்பு samugammedia ஆறு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் யாழில் நேற்று உயிரிழந்துள்ளார்.வாடி ஒழுங்கை வல்வெட்டித்துறையைச் சேர்ந்த சிவரூபன் கேனுசா (வயது- 24) என்கிற ஒரு பிள்ளையின் தாயான இளம் குடும்பப் பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,,,குறித்த பெண்ணுக்கு கடந்த ஆறாம் திகதி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார். இருந்தும் காய்ச்சல் குறையாத நிலையில் கடந்த 9 ஆம் திகதி வல்வெட்டித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதையடுத்து மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று (11) பிற்பகல் உயிரிழந்தார்.குறித்த மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரணவிசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார்.