• May 13 2024

அவுஸ்திரேவியாவில் துப்பாக்கிச் சமர் - காவல்துறை அதிகாரிகள் உட்பட அறுவர் பலி!

Chithra / Dec 13th 2022, 11:44 am
image

Advertisement

அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற துப்பாக்கிச் சமரில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் உட்பட 6 பேர் கொல்லப்பட்டனர்.

துப்பாக்கி வன்முறை அரிதாகவே இடம்பெறுகின்ற ஒரு நாட்டில் இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நியூஸ் சவுத் வேல்ஸ் காவல்துறையின் வேண்டுகோளின் பேரில், காணாமல் போன ஒருவரை தேடச் சென்ற நான்கு குயின்ஸ்லாந்து காவல்துறை அதிகாரிகள் குழுவின் மீது, வீடு ஒன்றில் இருந்த 3 பேர் கொண்ட குழு ஒன்றினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

எனினும் அந்தக் குழுவின் நோக்கம் தெரியவரவில்லை. இந்த சம்பவத்தின்போது, குறித்த வீட்டினது அயல்வீட்டுக்காரர் ஒருவரும் கொல்லப்பட்டார்.

இந்த தாக்குதலை அடுத்து, காவல்துறையினர் நடத்திய பதில் தாக்குதலில், தாக்குதல்தாரிகள் மூவரும் கொல்லப்பட்டனர்

அவுஸ்திரேவியாவில் துப்பாக்கிச் சமர் - காவல்துறை அதிகாரிகள் உட்பட அறுவர் பலி அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற துப்பாக்கிச் சமரில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் உட்பட 6 பேர் கொல்லப்பட்டனர்.துப்பாக்கி வன்முறை அரிதாகவே இடம்பெறுகின்ற ஒரு நாட்டில் இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.நியூஸ் சவுத் வேல்ஸ் காவல்துறையின் வேண்டுகோளின் பேரில், காணாமல் போன ஒருவரை தேடச் சென்ற நான்கு குயின்ஸ்லாந்து காவல்துறை அதிகாரிகள் குழுவின் மீது, வீடு ஒன்றில் இருந்த 3 பேர் கொண்ட குழு ஒன்றினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.எனினும் அந்தக் குழுவின் நோக்கம் தெரியவரவில்லை. இந்த சம்பவத்தின்போது, குறித்த வீட்டினது அயல்வீட்டுக்காரர் ஒருவரும் கொல்லப்பட்டார்.இந்த தாக்குதலை அடுத்து, காவல்துறையினர் நடத்திய பதில் தாக்குதலில், தாக்குதல்தாரிகள் மூவரும் கொல்லப்பட்டனர்

Advertisement

Advertisement

Advertisement