தர்மபுரம் மாவட்டம் முள்ளிக்காடு பகுதியில் கடந்த ஒன்பது மாதங்களாக காணாமல் போன பன்னிரெண்டாம் வகுப்பு மாணவியின் எலும்புகள் மீட்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த மாணவி ஒன்பது மாதங்களிற்கு முன்னர் காணாமல் போயுள்ள நிலையில், காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்தும் மாணவி குறித்து எந்த தகவலும் கிடைக்காமல் இருந்துள்ளது.
இந்த நிலையில் மாணவியின் சடலம் குறித்து தகவலறிந்த பொலீசார் சம்பந்தப்பட்ட இடத்தில் தேடிய போது
மாணவியின் எலும்புகூடுகள், துப்பட்டா,கைக்கடிகாரம் மற்றும் கொலுசு ஆகியவற்றை மீட்டுள்ளனர்.
இது தொடர்பாக தெரிவித்துள்ள மாணவியின் பெற்றோர், மாங்கடையயை சேர்ந்த ஒருவரே தமக்கு உண்மையினை கூறியதாக தெரிவித்துள்ளனர். அவர் தங்களிடம் தனது பெயரினை வெளியில் கூற கூடாது என சத்தியம் வாங்கி விட்டு, குறித்த இடத்தில் மகளின் சடலம் இருக்கும் என்று கூறியதாக தெரிவித்துள்ளனர்.
அத்தோடு அப்பகுதியினை சேர்ந்த ஊர் கவுண்டர் மகன் கோவிந்தராஜ்,மோகன் குமார் ஆகியோரே தமது மகளின் இறப்புக்கு காரணம் எனவும் ஊர் கட்டுப்பாடு விதித்து இந்த விடயத்தினை ஒன்பது மாதங்களாக மறைத்துள்ளதாகவும் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
அதனை தொடர்ந்தே பொலிசார் குறித்த இடத்திற்கு சென்று சோதனை நடத்தி மாணவியின் எலும்புக்கூடு, துப்பட்டா,கொலுசு ஆகியவற்றை மீட்டு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒன்பது மதங்களாக காணாமல் போன மாணவியின் எலும்புகூடுகள் மீட்பு- கொலை தொடர்பில் உண்மையினை மூடி கட்டுப்பாடு போட்ட ஊரவர் SamugamMedia தர்மபுரம் மாவட்டம் முள்ளிக்காடு பகுதியில் கடந்த ஒன்பது மாதங்களாக காணாமல் போன பன்னிரெண்டாம் வகுப்பு மாணவியின் எலும்புகள் மீட்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.குறித்த மாணவி ஒன்பது மாதங்களிற்கு முன்னர் காணாமல் போயுள்ள நிலையில், காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்தும் மாணவி குறித்து எந்த தகவலும் கிடைக்காமல் இருந்துள்ளது.இந்த நிலையில் மாணவியின் சடலம் குறித்து தகவலறிந்த பொலீசார் சம்பந்தப்பட்ட இடத்தில் தேடிய போது மாணவியின் எலும்புகூடுகள், துப்பட்டா,கைக்கடிகாரம் மற்றும் கொலுசு ஆகியவற்றை மீட்டுள்ளனர்.இது தொடர்பாக தெரிவித்துள்ள மாணவியின் பெற்றோர், மாங்கடையயை சேர்ந்த ஒருவரே தமக்கு உண்மையினை கூறியதாக தெரிவித்துள்ளனர். அவர் தங்களிடம் தனது பெயரினை வெளியில் கூற கூடாது என சத்தியம் வாங்கி விட்டு, குறித்த இடத்தில் மகளின் சடலம் இருக்கும் என்று கூறியதாக தெரிவித்துள்ளனர்.அத்தோடு அப்பகுதியினை சேர்ந்த ஊர் கவுண்டர் மகன் கோவிந்தராஜ்,மோகன் குமார் ஆகியோரே தமது மகளின் இறப்புக்கு காரணம் எனவும் ஊர் கட்டுப்பாடு விதித்து இந்த விடயத்தினை ஒன்பது மாதங்களாக மறைத்துள்ளதாகவும் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். அதனை தொடர்ந்தே பொலிசார் குறித்த இடத்திற்கு சென்று சோதனை நடத்தி மாணவியின் எலும்புக்கூடு, துப்பட்டா,கொலுசு ஆகியவற்றை மீட்டு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.