• Sep 29 2024

பொசன் யாத்திரீகர்களுக்காக விசேட பேருந்து மற்றும் ரயில் சேவைகள்..!

Chithra / Jun 20th 2024, 8:11 am
image

Advertisement

 

பொசன் நோன்மதி தினத்தினை முன்னிட்டு அநுராதபுரத்தின் புனித பூமியை வழிபட வரும் பக்தர்களுக்காக இன்று (20) முதல் விசேட பேருந்து மற்றும் ரயில் சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து அநுராதபுரம் புனித பூமிக்கு வரும் பக்தர்களின் போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் ரயில் சேவைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே துணைப் பொது மேலாளர் என். ஜே. இதிபொலகே குறிப்பிட்டார்.

அநுராதபுரத்திற்கு வரும் மக்களுக்காக மேலதிக பஸ்களை சேவையில் ஈடுபடுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்தார்.

இதேவேளை, இந்த ஆண்டு பொசன் நோன்மதி தினத்தினை முன்னிட்டு 20,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அநுராதபுரம் நகரை மாசுபடுத்தாமல் யாத்திரையை மேற்கொள்ளுமாறு அதமஸ்தானத்தின் தலைவர் பல்லேகம ஹேமரதன, அநுராதபுரத்திற்கு வழிபட வரும் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பொசன் யாத்திரீகர்களுக்காக விசேட பேருந்து மற்றும் ரயில் சேவைகள்.  பொசன் நோன்மதி தினத்தினை முன்னிட்டு அநுராதபுரத்தின் புனித பூமியை வழிபட வரும் பக்தர்களுக்காக இன்று (20) முதல் விசேட பேருந்து மற்றும் ரயில் சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து அநுராதபுரம் புனித பூமிக்கு வரும் பக்தர்களின் போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் ரயில் சேவைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே துணைப் பொது மேலாளர் என். ஜே. இதிபொலகே குறிப்பிட்டார்.அநுராதபுரத்திற்கு வரும் மக்களுக்காக மேலதிக பஸ்களை சேவையில் ஈடுபடுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்தார்.இதேவேளை, இந்த ஆண்டு பொசன் நோன்மதி தினத்தினை முன்னிட்டு 20,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.இதேவேளை, அநுராதபுரம் நகரை மாசுபடுத்தாமல் யாத்திரையை மேற்கொள்ளுமாறு அதமஸ்தானத்தின் தலைவர் பல்லேகம ஹேமரதன, அநுராதபுரத்திற்கு வழிபட வரும் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement