புதிய ஆண்டிற்குள் கொண்டு செல்ல வேண்டாம் என்று நம்பியிருந்த பழைய பிரச்சனைகளுடன் இலங்கை தடுமாறி நிற்பதாக சிங்கப்பூரில் செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.
வங்குரோத்து நிலையில் உள்ள இலங்கை, சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பிணை எடுப்பதற்குத் தேவையான இருதரப்பு ஒப்புதல்களைப் பெறுவதற்கு தவறியுள்ளது.
டிசம்பர் இறுதிக்குள் என்ற அதன் காலக்கெடுவுக்கு இன்னும் ஒரு நாளே உள்ளது.
இந்தநிலையில் இலங்கையின் மிகப்பெரிய கடன் கொடுநரான சீனாவுடன் இன்னும் கடன் மறுசீரமைப்பு பேச்சுக்கள் வெற்றியளிக்கவில்லை என்று சிங்கப்பூர் செய்தித்தாள் கூறுகிறது.