சைனா ஹார்பர் இன்ஜினியரிங் கோர்ப்பரேஷன், கொழும்பு துறைமுக நகரத்திற்குள் அடையாளம் காணப்பட்ட பல திட்டங்களில் மேலும் 1.2 பில்லியன் டொலர் புதிய முதலீடுகளை உறுதி செய்துள்ளது.
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியுடனான சந்திப்பின் போது சைனா ஹார்பர் இன்ஜினியரிங்
கோர்ப்பரேஷனின் தலைவர் டாங் கியாலியாங் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.
இந்த சந்திப்பின் போது, சைனா ஹார்பர் இன்ஜினியரிங் கோர்ப்பரேஷனின் இலங்கையில் முதலீடுகளின் முன்னேற்றம் குறித்து இரு தரப்பினரும் ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது.