கொப் - 28 எனப்படும் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் 'காலநிலை நீதிப்பேரவை' என்ற பெயரிலான கட்டமைப்பொன்றை உருவாக்குவதற்கான முன்மொழிவொன்றை இலங்கை சமர்ப்பிக்கவுள்ளது.
கொப் 28 எனப்படும் காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் பணிவரைவு உடன்படிக்கை பங்காளர்களின் 28ஆவது மாநாடு டுபாயில் இடம்பெறவுள்ளது.
மேலும் எதிர்வரும் நவம்பர் மாதம் 30ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள கொப் 28 மாநாட்டை டிசம்பர் 12 ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.