கடந்த 03 ஆம் திகதி சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலத்தை சான்றுரைப்படுத்தியிருப்பதாக இன்றைய தினம் (7) பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
குறித்த சட்டமூலம் 2024 ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாதத்தின் பின்னர் நிறைவேற்றப்பட்டது.
இதற்கமைய குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் 2024 ஆம் ஆண்டு 25ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமாக கடந்த 03ஆம் திகதி முதல் நடைமுறைக்குவருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.