• May 20 2024

காதலனை நிர்வாணமாக்கி சிகரெட் சூடு- புது காதலனுடன் காதலி செய்த கொடூரம்!samugammedia

Sharmi / Apr 14th 2023, 1:14 pm
image

Advertisement


கேரள மாநிலத்தில் உள்ள வர்க்கலா சேர்னியூர் பகுதியை  லட்சுமி பிரியா (19) கல்லூரியில்  முதலாமாண்டு படித்து வரும் நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞருடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில் இருவரும் காதலித்து வந்துள்ளனர்.  

இதற்கிடையில்  தன்னுடன் படிக்கும் வேறு ஒரு மாணவருடன்  பிரியாவுக்கு ஈர்ப்பு ஏற்பட்டதால் இருவரும் காதலில் விழுந்துள்ளனர்.இதனால் முதல் காதலனை சந்திப்பதையும் அவருடன் கதைப்பதையும்  தவிர்த்துள்ளார்.

இதனால் மனமுடைந்த முதல் காதலன் பிரியாவை சந்தித்து தன்னுடன் கதைக்குமாறு கெஞ்சி வந்துள்ளார். அவரது தொந்தரவு தங்க முடியாத பிரியா முன்னாள் காதலனை சந்திக்க வேண்டுமென அழைத்தமையால் அவரும்  ஆசையாக  சென்றுள்ளார்.

பிரியா அங்கு வந்த தனது முதல் காதலனை, இரண்டாவது காதலர் மற்றும் அவரது கூட்டாளிகளுடன் சேர்ந்து சரமாரியாக தாக்கியதுடன்  நிர்வாணமாக்கி சிகரெட்டால் உடல் முழுவதும் சூடுவைத்த பின்னர்  செல்போனையும் அபகரித்து சென்றுள்ளனர்.

சராமாரியாக தாக்கப்பட்ட முன்னாள் காதலன் அருகில் இருந்தவர்களால் மருத்துவமனையில் அனுமதிகப்பட்டுள்ளார்.

மேலும் இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்த நிலையில், எர்ணாகுளத்தில் பதுங்கி இருந்த லட்சுமி பிரியாவை  கைது செய்துள்ளதுடன் தலைமறைவாகியுள்ள  அவரின் காதலர் மற்றும் கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.


காதலனை நிர்வாணமாக்கி சிகரெட் சூடு- புது காதலனுடன் காதலி செய்த கொடூரம்samugammedia கேரள மாநிலத்தில் உள்ள வர்க்கலா சேர்னியூர் பகுதியை  லட்சுமி பிரியா (19) கல்லூரியில்  முதலாமாண்டு படித்து வரும் நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞருடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில் இருவரும் காதலித்து வந்துள்ளனர்.  இதற்கிடையில்  தன்னுடன் படிக்கும் வேறு ஒரு மாணவருடன்  பிரியாவுக்கு ஈர்ப்பு ஏற்பட்டதால் இருவரும் காதலில் விழுந்துள்ளனர்.இதனால் முதல் காதலனை சந்திப்பதையும் அவருடன் கதைப்பதையும்  தவிர்த்துள்ளார். இதனால் மனமுடைந்த முதல் காதலன் பிரியாவை சந்தித்து தன்னுடன் கதைக்குமாறு கெஞ்சி வந்துள்ளார். அவரது தொந்தரவு தங்க முடியாத பிரியா முன்னாள் காதலனை சந்திக்க வேண்டுமென அழைத்தமையால் அவரும்  ஆசையாக  சென்றுள்ளார். பிரியா அங்கு வந்த தனது முதல் காதலனை, இரண்டாவது காதலர் மற்றும் அவரது கூட்டாளிகளுடன் சேர்ந்து சரமாரியாக தாக்கியதுடன்  நிர்வாணமாக்கி சிகரெட்டால் உடல் முழுவதும் சூடுவைத்த பின்னர்  செல்போனையும் அபகரித்து சென்றுள்ளனர். சராமாரியாக தாக்கப்பட்ட முன்னாள் காதலன் அருகில் இருந்தவர்களால் மருத்துவமனையில் அனுமதிகப்பட்டுள்ளார். மேலும் இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்த நிலையில், எர்ணாகுளத்தில் பதுங்கி இருந்த லட்சுமி பிரியாவை  கைது செய்துள்ளதுடன் தலைமறைவாகியுள்ள  அவரின் காதலர் மற்றும் கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement