மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலுமில்லக் காணியை இலங்கை இராணுவம் ஆக்கிரமிக்க முயற்சிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு ஏற்கனவே உடைக்கப்பட்ட மாவீரர்களின் நினைவுக்கற்களை மக்கள் ஓரிடத்தில் குவித்துள்ளனர்.
அந்த கற்குவியலை முற்றாக இராணுவம் அந்த இடத்தில் இருந்து அகற்றிவிட்டு மாவீரர் துயிலுமில்ல காணியில் நான்கு அரச மரக்கன்றுகள் உட்பட மரக்கன்றுகளை நடுவதற்கு முயற்சித்தவேளை கறடியனாறு தமிழ்தேசிய மக்கள் இயக்கத்தினாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த அநீதியான செயலில் அப்பகுதியில் இலங்கை இராணுவ புலனாய்வுப் பிரிவுடன் சேர்ந்து செயற்படும் தமிழ் இளைஞர்கள் சிலர் சம்மந்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழ் மக்களின் முக்கிய இடத்தில் இப்படி ஒரு செயற்பாடா மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலுமில்லக் காணியை இலங்கை இராணுவம் ஆக்கிரமிக்க முயற்சிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அங்கு ஏற்கனவே உடைக்கப்பட்ட மாவீரர்களின் நினைவுக்கற்களை மக்கள் ஓரிடத்தில் குவித்துள்ளனர்.அந்த கற்குவியலை முற்றாக இராணுவம் அந்த இடத்தில் இருந்து அகற்றிவிட்டு மாவீரர் துயிலுமில்ல காணியில் நான்கு அரச மரக்கன்றுகள் உட்பட மரக்கன்றுகளை நடுவதற்கு முயற்சித்தவேளை கறடியனாறு தமிழ்தேசிய மக்கள் இயக்கத்தினாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.இந்த அநீதியான செயலில் அப்பகுதியில் இலங்கை இராணுவ புலனாய்வுப் பிரிவுடன் சேர்ந்து செயற்படும் தமிழ் இளைஞர்கள் சிலர் சம்மந்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.