• Oct 06 2024

பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் திடீரென பற்றிய தீ - நாசமான சொத்துக்கள்...! நடந்தது என்ன?

Sharmi / Jul 8th 2024, 4:46 pm
image

Advertisement

மவுண்ட் பிரிவில் உள்ள சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கட்டிடத்தின் கீழ் தளத்தில் உள்ள பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் திடீர் தீவிபத்து ஏற்பட்டு பல சொத்துக்கள்  சேதமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தீ விபத்து ஏற்பட்ட போது பொலிஸ் அத்தியட்சகர் குறித்த அலுவலகத்தில் இருந்திருக்கவில்லை எனவும், தீ விபத்தில் பல கணனிகள், கோப்புகள் மற்றும் சொத்துக்கள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை தீவிபத்து இடம்பெற்ற  அலுவலகத்திற்கு அருகில் உள்ள அலுவலக அதிகாரிகள் உடனடியாக வந்து தீயை கட்டுப்படுத்தியதுடன், மேலதிகமாக தெஹிவளை மாநகர சபை அதிகாரிகளும் இணைந்து  தீயை அணைத்தனர்.

தீவிபத்து சம்பவம் குறித்து, மவுண்ட் பிரிவு குற்றப் புலனாய்வு ஆய்வக அதிகாரிகளும் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் திடீரென பற்றிய தீ - நாசமான சொத்துக்கள். நடந்தது என்ன மவுண்ட் பிரிவில் உள்ள சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கட்டிடத்தின் கீழ் தளத்தில் உள்ள பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் திடீர் தீவிபத்து ஏற்பட்டு பல சொத்துக்கள்  சேதமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தீ விபத்து ஏற்பட்ட போது பொலிஸ் அத்தியட்சகர் குறித்த அலுவலகத்தில் இருந்திருக்கவில்லை எனவும், தீ விபத்தில் பல கணனிகள், கோப்புகள் மற்றும் சொத்துக்கள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.அதேவேளை தீவிபத்து இடம்பெற்ற  அலுவலகத்திற்கு அருகில் உள்ள அலுவலக அதிகாரிகள் உடனடியாக வந்து தீயை கட்டுப்படுத்தியதுடன், மேலதிகமாக தெஹிவளை மாநகர சபை அதிகாரிகளும் இணைந்து  தீயை அணைத்தனர்.தீவிபத்து சம்பவம் குறித்து, மவுண்ட் பிரிவு குற்றப் புலனாய்வு ஆய்வக அதிகாரிகளும் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement