ஜெர்மனியில் மரணங்கள் அதிகரித்துள்ளமையினால் அதிகாரிகள் குழப்பமடைந்துள்ளனர்.
ஜெர்மனியில் கடந்த மாதம் பல்வேறு விடயங்களினால் பாரிய அளவிலான மக்கள் உயிரிழந்துள்ளனர்.
அதற்கமைய, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக புள்ளி விபரம் ஒன்று வெளியாகியுள்ளது.
ஜெர்மனியில் கடந்த மாதம் இறந்தவர்களின் எண்ணிக்கை கணக்கிட்ட நிலையில் ஏனைய மாதங்களை விடவும் மரணங்கள் அதிகமாக காணப்படுவதாக புள்ளிவிபரம் ஒன்று தெரிவிக்கின்றது.
பிஸ்பாடனில் அமைந்து இருக்கின்ற ஜெர்மனியின் புள்ளி விபரம் திணைக்களம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் ஜனவரி மாதத்தில் மட்டும் 98632 பேர் உயிரிழந்துள்ளதாக வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறு கூடுதலாக இறப்பதற்கு இன்புளுவன்சா என்ற காய்ச்சல் முக்கிய காரணமாக அமைந்துள்ளதுடன்,
மேலும் கடந்த இரு ஆண்டு காலமாக கொரோனா தொற்று இருந்த காரணத்தினாலும் இந்த உயிரிழப்புக்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜனவரி மாதத்தின் முதல் கிழமையில் இறந்தவர்களுடைய எண்ணிக்கையானது 26 சதவீதமாக உயர்வாக இருந்ததாகவும் இந்த புள்ளி விபரம் சுட்டிகாட்டுகின்றது.
ஜெர்மனியில் திடீரென அதிகரித்த மரணங்கள் - குழப்பத்தில் அதிகாரிகள் SamugamMedia ஜெர்மனியில் மரணங்கள் அதிகரித்துள்ளமையினால் அதிகாரிகள் குழப்பமடைந்துள்ளனர்.ஜெர்மனியில் கடந்த மாதம் பல்வேறு விடயங்களினால் பாரிய அளவிலான மக்கள் உயிரிழந்துள்ளனர்.அதற்கமைய, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக புள்ளி விபரம் ஒன்று வெளியாகியுள்ளது.ஜெர்மனியில் கடந்த மாதம் இறந்தவர்களின் எண்ணிக்கை கணக்கிட்ட நிலையில் ஏனைய மாதங்களை விடவும் மரணங்கள் அதிகமாக காணப்படுவதாக புள்ளிவிபரம் ஒன்று தெரிவிக்கின்றது.பிஸ்பாடனில் அமைந்து இருக்கின்ற ஜெர்மனியின் புள்ளி விபரம் திணைக்களம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.குறித்த அறிக்கையில் ஜனவரி மாதத்தில் மட்டும் 98632 பேர் உயிரிழந்துள்ளதாக வெளியிடப்பட்டுள்ளது.இவ்வாறு கூடுதலாக இறப்பதற்கு இன்புளுவன்சா என்ற காய்ச்சல் முக்கிய காரணமாக அமைந்துள்ளதுடன்,மேலும் கடந்த இரு ஆண்டு காலமாக கொரோனா தொற்று இருந்த காரணத்தினாலும் இந்த உயிரிழப்புக்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.ஜனவரி மாதத்தின் முதல் கிழமையில் இறந்தவர்களுடைய எண்ணிக்கையானது 26 சதவீதமாக உயர்வாக இருந்ததாகவும் இந்த புள்ளி விபரம் சுட்டிகாட்டுகின்றது.