நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 7 பேரும், எதிர்வரும் ஆகஸ்ட் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்படுவார்கள் என யாழ் ஊர்காவற்றுறை நீதவான் நளினி சுபாஸ்கரன் நேற்று (25) உத்தரவிட்டார்.
கடந்த ஜூலை 13ஆம் திகதி, இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்ததற்காக இந்திய இழுவை படகுடன் கைது செய்யப்பட்ட இம்மீனவர்கள், ஆரம்பத்தில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, பின்னர் விசாரணைக்காக கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவர்கள் கடந்த சில நாட்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றைய விசாரணையில் மேலும் ஆகஸ்ட் 6 வரை இவர்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
இவ்வருடம் இதுவரை 185 தமிழக மீனவர்கள் மற்றும் 25 இந்திய மீன்பிடி படகுகள் இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமிழக மீனவர்கள் ஒகஸ்ட் 06 வரை விளக்கமறியலில் – யாழ் நீதிமன்றம் உத்தரவு நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 7 பேரும், எதிர்வரும் ஆகஸ்ட் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்படுவார்கள் என யாழ் ஊர்காவற்றுறை நீதவான் நளினி சுபாஸ்கரன் நேற்று (25) உத்தரவிட்டார்.கடந்த ஜூலை 13ஆம் திகதி, இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்ததற்காக இந்திய இழுவை படகுடன் கைது செய்யப்பட்ட இம்மீனவர்கள், ஆரம்பத்தில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, பின்னர் விசாரணைக்காக கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.அதனைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவர்கள் கடந்த சில நாட்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றைய விசாரணையில் மேலும் ஆகஸ்ட் 6 வரை இவர்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.இவ்வருடம் இதுவரை 185 தமிழக மீனவர்கள் மற்றும் 25 இந்திய மீன்பிடி படகுகள் இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.