தமிழ் தேசிய கூட்டமைப்பில் தமிழரசுக் கட்சியே பிரதான கட்சியாக உள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தனித்தனியாக போட்டியிடுவதற்கு சிபாரிசுகள் முன்வைக்கப்பட்ட பின்னர் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற சொற்பதத்தை பயன்படுத்தக்கூடாது என இணக்கப்படு எட்டப்பட்டதாகவும் ஆனால் ரெலோ புளொட் ஆகியவை அதனை மீறி செய்படுவதாக எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று முன்தினம் யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
எனவே உள்ளுராட்சி மன்னற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு போட்டியிடவில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் இரு தரப்பும் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரை பயன்படுத்தக்கூடாது என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தனித்தனியாக போட்டியிடுவதாக தெரிவித்த இரு தரப்பிடமும் தெரிவித்திருந்ததாகவும் ஆனால் அதனை மீறி புளொட், ரெலோ ஆகியன பெயரை பயன்படுத்தி பிரச்சாரம் செய்வதாக எம்.ஏ.சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதான கட்சியே தமிழரசுக் கட்சி: புளொட், ரெலோ மீது சுமந்தின் குற்றச்சாட்டுSamugamMedia தமிழ் தேசிய கூட்டமைப்பில் தமிழரசுக் கட்சியே பிரதான கட்சியாக உள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.தனித்தனியாக போட்டியிடுவதற்கு சிபாரிசுகள் முன்வைக்கப்பட்ட பின்னர் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற சொற்பதத்தை பயன்படுத்தக்கூடாது என இணக்கப்படு எட்டப்பட்டதாகவும் ஆனால் ரெலோ புளொட் ஆகியவை அதனை மீறி செய்படுவதாக எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.நேற்று முன்தினம் யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.எனவே உள்ளுராட்சி மன்னற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு போட்டியிடவில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.இந்நிலையில் இரு தரப்பும் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரை பயன்படுத்தக்கூடாது என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தனித்தனியாக போட்டியிடுவதாக தெரிவித்த இரு தரப்பிடமும் தெரிவித்திருந்ததாகவும் ஆனால் அதனை மீறி புளொட், ரெலோ ஆகியன பெயரை பயன்படுத்தி பிரச்சாரம் செய்வதாக எம்.ஏ.சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.