சங்கானை மாவடி இந்து இளைஞர் மன்றத்தினால் வருடந்தோறும் நடாத்தப்பட்டுவரும் பாரம்பரிய விளையாட்டு விழாவின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் நேற்றையதினம்(14) சங்கானை மாவடி ஞானவைரவர் ஆலய முன்றலில் இடம்பெற்றது.
விளையாட்டு நிகழ்வுகளின் வரிசையில் வினோத உடைப் போட்டி, தலையணைச் சண்டை, மெதுவான சைக்கிள் ஓட்டம், சங்கீதக் கதிரை, கயிறு இழுத்தல்,குடும்பத் தலைவர்களுக்கான விசேட போட்டிகள் என்பன இடம்பெற்றது.
இந் நிகழ்வுகளில் சிறுவர்கள் இளைஞர் யுவதிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.