• May 18 2024

கொழும்பில் திடீரென குவிக்கப்பட்டுள்ள இராணுவம்..! காரணம் வெளியானது samugammedia

Chithra / May 15th 2023, 9:26 am
image

Advertisement

அவசரநிலையில் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் முப்படையினரும் முன்பயிற்சிகளை வழங்குவதற்காக கொழும்பு நகரை அண்மித்த பகுதிகளில் முப்படையினரும் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதன்படி முப்படையினரும் ஒத்திகையில் மாத்திரம் ஈடுபட்டுள்ளதாகவும், அன்றி எவ்வித கடமை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் இன்று நடத்திய விசாரணையில் தெரிவித்துள்ளார்.

அவசர காலங்களில் பொலிஸாருக்கு கடமையாற்றும் வகையில் இராணுவத்தினர் இவ்வாறு பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், அதற்கான பயிற்சிக்கான இறுதி திகதியை அறிவிக்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டது.

கடந்த 12ஆம் திகதி முதல் கொழும்பிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் பொலிஸாரைத் தவிர முப்படையைச் சேர்ந்தவர்களும் குவிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் திடீரென குவிக்கப்பட்டுள்ள இராணுவம். காரணம் வெளியானது samugammedia அவசரநிலையில் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் முப்படையினரும் முன்பயிற்சிகளை வழங்குவதற்காக கொழும்பு நகரை அண்மித்த பகுதிகளில் முப்படையினரும் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.இதன்படி முப்படையினரும் ஒத்திகையில் மாத்திரம் ஈடுபட்டுள்ளதாகவும், அன்றி எவ்வித கடமை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் இன்று நடத்திய விசாரணையில் தெரிவித்துள்ளார்.அவசர காலங்களில் பொலிஸாருக்கு கடமையாற்றும் வகையில் இராணுவத்தினர் இவ்வாறு பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், அதற்கான பயிற்சிக்கான இறுதி திகதியை அறிவிக்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டது.கடந்த 12ஆம் திகதி முதல் கொழும்பிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் பொலிஸாரைத் தவிர முப்படையைச் சேர்ந்தவர்களும் குவிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement