கடந்த 21 புதன்கிழமை அன்று பளை முல்லையடிப் பகுதியில் இலங்கைப் போக்குவரத்திற்குச் சொந்தமான (திருகோணமலை - யாழ்ப்பாணம்) பயணிகள் பேருந்து சாரதியின் அசண்டையீனத்தால் வேகக்கட்டுப்பாட்டை இழந்து குடைசாய்ந்ததில் 32 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் உயிரிழந்ததுடன் 20ற்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.
அவர்களில் இரண்டு சிறுவர்கள் உட்பட 6ற்கு மேற்பட்டோர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அந்த சிறுவர்களில் திருகோணமலையை சேர்ந்த ஒரு சிறுவனது கை அகற்றப்பட்டுள்ளது.