ஊர்காவற்துறை தம்பாட்டி பகுதியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்படும் காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் (04) போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
நாரந்தனை வடக்கு தம்பாட்டியில் உள்ள இறங்கு துறையில் இந்த போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.
ஊர்காவற்துறை மீனவர்களுக்கு சொந்தமான தம்பாட்டி இறங்குதுறைக்கு அண்மையில் உள்ள பகுதியில் கடற்படையினரால் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டிருந்த நிலையில், இதனை அகற்றுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
எனினும் குறித்த அரச காணியிலிருந்து கடற்படையினர் வெளியேறாத நிலையில், இன்றைய தினம் (04) நில அளவை திணைக்களத்தினர் அந்த காணியை அளந்து கடற்படையினருக்கு வழங்குவதற்காக அங்கு செல்லவுள்ளனர்.
இந்த நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்களால் இன்று காலை 8 மணியளவில் தம்பாட்டி இறங்குதுறையில் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
தம்பாட்டி இறங்குதுறை கடற்படைக்கா காணிசுவீகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் samugammedia ஊர்காவற்துறை தம்பாட்டி பகுதியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்படும் காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் (04) போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.நாரந்தனை வடக்கு தம்பாட்டியில் உள்ள இறங்கு துறையில் இந்த போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.ஊர்காவற்துறை மீனவர்களுக்கு சொந்தமான தம்பாட்டி இறங்குதுறைக்கு அண்மையில் உள்ள பகுதியில் கடற்படையினரால் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டிருந்த நிலையில், இதனை அகற்றுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.எனினும் குறித்த அரச காணியிலிருந்து கடற்படையினர் வெளியேறாத நிலையில், இன்றைய தினம் (04) நில அளவை திணைக்களத்தினர் அந்த காணியை அளந்து கடற்படையினருக்கு வழங்குவதற்காக அங்கு செல்லவுள்ளனர்.இந்த நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்களால் இன்று காலை 8 மணியளவில் தம்பாட்டி இறங்குதுறையில் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.