பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு மாற்றீடாக கொண்டுவரப்படும் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் பலம் பொருந்திய வகையிலும், ஒவ்வொருவரினதும் அடிப்படை உரிமைகளை அடக்கும் வகையிலும் காணப்படுவதாக இந்துக் குருமார் அமைப்பின் தலைவர் சிவஸ்ரீ கு.வை.க.வைத்தீஸ்வரக் குருக்கள் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே வைத்தீஸ்வரக் குருக்கள் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன், மக்களின் கருத்துக்களுக்கும் சுதந்திரத்துக்கும் மதிப்பளித்து அரசாங்கம் செயற்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு செயற்பட்டால் மாத்திரமே இந்த நாடு முன்னேற்றகரமான புள்ளியை முக்கி நகர்வதற்கான சாத்தியம் காணப்படுகிறது என்றும் வைத்தீஸ்வரக் குருக்கள் தெரிவித்தார்.
எனவே, அனைவரினதும் கருத்துக்களை உள்வாங்கி நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாக்கும் வகையில் சட்டம் இயற்றப்படவேண்டும் என்ற கருத்தை இந்து மக்கள் சார்பில் முன்வைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அடிப்படை உரிமைகளை அடக்கும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம்: இந்துக் குருமார் அமைப்பு எதிர்ப்பு samugammedia பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு மாற்றீடாக கொண்டுவரப்படும் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் பலம் பொருந்திய வகையிலும், ஒவ்வொருவரினதும் அடிப்படை உரிமைகளை அடக்கும் வகையிலும் காணப்படுவதாக இந்துக் குருமார் அமைப்பின் தலைவர் சிவஸ்ரீ கு.வை.க.வைத்தீஸ்வரக் குருக்கள் தெரிவித்தார்.யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே வைத்தீஸ்வரக் குருக்கள் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அத்துடன், மக்களின் கருத்துக்களுக்கும் சுதந்திரத்துக்கும் மதிப்பளித்து அரசாங்கம் செயற்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.அவ்வாறு செயற்பட்டால் மாத்திரமே இந்த நாடு முன்னேற்றகரமான புள்ளியை முக்கி நகர்வதற்கான சாத்தியம் காணப்படுகிறது என்றும் வைத்தீஸ்வரக் குருக்கள் தெரிவித்தார்.எனவே, அனைவரினதும் கருத்துக்களை உள்வாங்கி நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாக்கும் வகையில் சட்டம் இயற்றப்படவேண்டும் என்ற கருத்தை இந்து மக்கள் சார்பில் முன்வைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.