வட ஆபிரிக்க நாடான மொரோக்கோவில் 6.8 ரிச்டர் அளவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 2,100பேர் உயிரிழந்துள்ளனர்.
அதேவேளை 2 ஆயிரத்து 59 பேர் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தால் அங்கு மூன்று நாட்கள் தேசிய துக்க தினம் அனுஷ்டிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், அரைக்கம்பத்தில் தேசியக்கொடியை பறக்கவிட அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.