• May 01 2024

முல்லைத்தீவில் கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தருக்கு ஏற்பட்ட கதி...!

Sharmi / Apr 18th 2024, 3:52 pm
image

Advertisement

முல்லைத்தீவில் கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு  தேவிபுரம் பகுதியில் கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில்  சேர்க்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் இன்று(18) இடம்பெற்றதுடன் புதுக்குடியிருப்பு கைவேலி மயில்குஞ்சன் பகுதியை சேர்ந்த 33 வயதுடைய குடும்பஸ்தரே இதில் காயமடைந்துள்ளார். 

குறித்த நபர் தமது வீட்டிலிருந்து தேவிபுரம் பகுதியிலுள்ள காட்டு பாதையால் சென்ற போது விலங்குகளை வேட்டையாடுவதற்காக பயன்படும் கட்டுத்துவக்கு வெடித்துள்ளது. 

இதனால் காயமடைந்த அவர் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


முல்லைத்தீவில் கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தருக்கு ஏற்பட்ட கதி. முல்லைத்தீவில் கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் காயமடைந்துள்ளார்.இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு  தேவிபுரம் பகுதியில் கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில்  சேர்க்கப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம் இன்று(18) இடம்பெற்றதுடன் புதுக்குடியிருப்பு கைவேலி மயில்குஞ்சன் பகுதியை சேர்ந்த 33 வயதுடைய குடும்பஸ்தரே இதில் காயமடைந்துள்ளார். குறித்த நபர் தமது வீட்டிலிருந்து தேவிபுரம் பகுதியிலுள்ள காட்டு பாதையால் சென்ற போது விலங்குகளை வேட்டையாடுவதற்காக பயன்படும் கட்டுத்துவக்கு வெடித்துள்ளது. இதனால் காயமடைந்த அவர் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement