• May 17 2024

முதல் பெண் மாவீரர் 2 ஆம் லெப். மாலதியின் 36ஆம் ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிப்பு samugammedia

Chithra / Oct 10th 2023, 11:42 am
image

Advertisement

விடுதலைப் போரில் உயிர்நீத்த முதல் பெண் மாவீரர் 2ஆம் லெப். மாலதியின் 36ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் நினைவு கூரப்பட்டுள்ளது.

இதன் போது சுடர் ஏற்றப்பட்டு மாவீரர் 2 ஆம் லெப்.மாலதியின் படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

சமூக செயற்பாட்டாளர் சகீலா தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் தபிசாளர் க.தவராசா, முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் கெங்காதரன், சமூக செயற்பாட்டாளர்களான ஜூட்சன், பீற்றர் இளஞ்செழியன் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


 

இதேவேளை  கிளிநொச்சி மாவட்ட தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் தருமபுரம் பகுதியில் ஒழுங்குபடுத்தப்பட்ட மண்டபத்தில் முதல் பெண் மாவீரர் இரண்டாம் லெப்டினன் மாலதி அவர்களின் 36 ஆவது நினைவு தின நிகழ்வுகள் நடைபெற்றது.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் மற்றும்  சாஸ் நிர்மலா நாதன்,  முன்னால் வடமாகான கல்வி அமச்சர் குருகுலராஜா, கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்கள் வர்த்தக சங்கத்தினர் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


முதல் பெண் மாவீரர் 2 ஆம் லெப். மாலதியின் 36ஆம் ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிப்பு samugammedia விடுதலைப் போரில் உயிர்நீத்த முதல் பெண் மாவீரர் 2ஆம் லெப். மாலதியின் 36ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் நினைவு கூரப்பட்டுள்ளது.இதன் போது சுடர் ஏற்றப்பட்டு மாவீரர் 2 ஆம் லெப்.மாலதியின் படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.சமூக செயற்பாட்டாளர் சகீலா தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் தபிசாளர் க.தவராசா, முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் கெங்காதரன், சமூக செயற்பாட்டாளர்களான ஜூட்சன், பீற்றர் இளஞ்செழியன் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இதேவேளை  கிளிநொச்சி மாவட்ட தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் தருமபுரம் பகுதியில் ஒழுங்குபடுத்தப்பட்ட மண்டபத்தில் முதல் பெண் மாவீரர் இரண்டாம் லெப்டினன் மாலதி அவர்களின் 36 ஆவது நினைவு தின நிகழ்வுகள் நடைபெற்றது.இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் மற்றும்  சாஸ் நிர்மலா நாதன்,  முன்னால் வடமாகான கல்வி அமச்சர் குருகுலராஜா, கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்கள் வர்த்தக சங்கத்தினர் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement