மதுரை அனுப்பானடியில் உள்ள பள்ளி மாணவி ஒருவரை அதே பகுதியைச் சேர்ந்த இளைஞன் காதலிப்பதாக கூறியுள்ளார்.
மாணவி இதுபற்றி தந்தையிடம் கூறியதால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியுள்ளது.
இதுதொடர்பான புகாரின் பேரில் இளைஞன் கைதாகி ஜாமினில் வெளியில் வந்துள்ளார்.
அதன் பின்னரும் மாணவியிடம் இளைஞன் தன்னை காதலிக்குமாறு தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் மாணவி தொடர்ந்து மறுத்து வந்ததால் ஆத்திரமடைந்த இளைஞன் தனது நண்பருடன் பைக்கில் வந்து பெட்ரோல் குண்டை மாணவியின் வீட்டில் வீசிவிட்டு தப்பியோடி விட்டார்.
பெட்ரோல் குண்டு பட்டதில் வீட்டின் சுவர் லேசான சேதமடைந்தது
இது குறித்து வழக்குப்பதிவு செய்த தெப்பக்குளம் காவல்துறையினர் இளைஞன் மற்றும் அவரது நண்பரை கைது செய்தனர்.
முதற்கட்ட விசாரணையில், தன்னை காதலிக்கக் கோரியும் மாணவி பதிலளிக்காததால் பெட்ரோல் குண்டை வீசி விட்டு தப்பி ஓடியது தெரிய வந்துள்ளது.
இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 2 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
காதலுக்கு ஓகே சொல்ல மறுத்த காதலி. பெட்ரோல் குண்டு வீசிய காதலன்SamugamMedia மதுரை அனுப்பானடியில் உள்ள பள்ளி மாணவி ஒருவரை அதே பகுதியைச் சேர்ந்த இளைஞன் காதலிப்பதாக கூறியுள்ளார். மாணவி இதுபற்றி தந்தையிடம் கூறியதால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியுள்ளது. இதுதொடர்பான புகாரின் பேரில் இளைஞன் கைதாகி ஜாமினில் வெளியில் வந்துள்ளார்.அதன் பின்னரும் மாணவியிடம் இளைஞன் தன்னை காதலிக்குமாறு தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் மாணவி தொடர்ந்து மறுத்து வந்ததால் ஆத்திரமடைந்த இளைஞன் தனது நண்பருடன் பைக்கில் வந்து பெட்ரோல் குண்டை மாணவியின் வீட்டில் வீசிவிட்டு தப்பியோடி விட்டார். பெட்ரோல் குண்டு பட்டதில் வீட்டின் சுவர் லேசான சேதமடைந்ததுஇது குறித்து வழக்குப்பதிவு செய்த தெப்பக்குளம் காவல்துறையினர் இளைஞன் மற்றும் அவரது நண்பரை கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில், தன்னை காதலிக்கக் கோரியும் மாணவி பதிலளிக்காததால் பெட்ரோல் குண்டை வீசி விட்டு தப்பி ஓடியது தெரிய வந்துள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 2 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.