• May 18 2024

திவாலான தேசம் என்ற முத்திரை விரைவில் அகற்றப்படும் - மனுச நாணயக்கார நம்பிக்கை.!

Sharmi / Jan 30th 2023, 1:43 pm
image

Advertisement

இலங்கைக்கு ஏற்பட்ட அவப்பெயரை அடுத்த சில மாதங்களில் நீக்கமுடியுமென தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுச நாணயக்கார நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.

இலங்கை திவாலான தேசம் அல்ல என்றும் மீண்டும் எழுச்சி பெற்று புகழ்பெற்ற தேசமாக மாற்றம் அடையும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

திவாலான தேசம் என்ற முத்திரை விரைவில் அகற்றப்படும் என்றும் கடனை அடைக்க ஆரம்பிப்பதன் மூலம் புதிய முதலீடுகளை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இதன் மூலம் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கும் என்று கூறிய அமைச்சர், எதிர்காலத்தில் வரி, வங்கி வட்டி விகிதங்களும் குறையலாம் என்றும் எதிர்வுகூறியுள்ளார்.
எனினும் இவ்வாறான மாற்றத்தை பலர் விரும்பவில்லை என்றும் எனவே சிலர் நாசவேலையில் ஈடுபடுவதாக மனுச நாணயக்கார குற்றம் சுமத்தியுள்ளார்.

திவாலான தேசம் என்ற முத்திரை விரைவில் அகற்றப்படும் - மனுச நாணயக்கார நம்பிக்கை. இலங்கைக்கு ஏற்பட்ட அவப்பெயரை அடுத்த சில மாதங்களில் நீக்கமுடியுமென தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுச நாணயக்கார நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.இலங்கை திவாலான தேசம் அல்ல என்றும் மீண்டும் எழுச்சி பெற்று புகழ்பெற்ற தேசமாக மாற்றம் அடையும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.திவாலான தேசம் என்ற முத்திரை விரைவில் அகற்றப்படும் என்றும் கடனை அடைக்க ஆரம்பிப்பதன் மூலம் புதிய முதலீடுகளை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.இதன் மூலம் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கும் என்று கூறிய அமைச்சர், எதிர்காலத்தில் வரி, வங்கி வட்டி விகிதங்களும் குறையலாம் என்றும் எதிர்வுகூறியுள்ளார்.எனினும் இவ்வாறான மாற்றத்தை பலர் விரும்பவில்லை என்றும் எனவே சிலர் நாசவேலையில் ஈடுபடுவதாக மனுச நாணயக்கார குற்றம் சுமத்தியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement