• Sep 20 2024

மாநாயக்க தேரர்கள் நாடு பிளவுபடும் என அச்சப்படுகின்றனர் - இதனை முதலில் தீர்க்கவேண்டும் - கரு ஜயசூரிய!

Tamil nila / Feb 7th 2023, 6:32 pm
image

Advertisement

13வது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்தினால் நாடு பிளவுப்படும் என்ற சந்தேகம் மாநாயக்க தேரர்களுக்கு ஏற்பட்டுள்ளதாக முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார்.


கண்டிக்குச் சென்று மதவழிபாடுகளில் ஈடுபட்டப் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே இதனை அவர் தெரிவித்திருந்தார்.


13ஆவது திருத்தச் சட்டம் என்பது எமது அரசியலமைப்பில் உள்ள ஒரு பகுதி.எனினும், இதனால் நாடு பிளவுப்படும் என்கிற சந்தேகம் மாநாயக்க தேரர்களுக்கு ஏற்பட்டுள்ளது.


இது தொடர்பில் கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடி, நாடாளுமன்றத்தில் தீர்மானிக்க வேண்டும் 

தற்போதைய அரசாங்கத்தின் வரிக் கொள்கைகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென தெரிவிக்கும் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி, நியாயமான முறையில் வரி அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். 


உள்ளூராட்சி மன்ற தேர்தலால் நாட்டில் ஆட்சி மாற்றம் இடம்பெறப்போவதில்லை. 

எவ்வாறாயினும் ஒரு தரப்பினர் தேர்தலுக்கு நிதியில்லை எனக் கூற மற்றொரு தரப்பினர் தேர்தலை நிச்சியமாக நடத்தியே ஆக வேண்டும் என கூறுகின்றனர்.


எனினும், பெரும்பாலானவர்கள் ஜனாதிபதி அல்லது நாடாளுமன்ற தேர்தலை நடத்த வேண்டும் என கூறுகிறார்கள். 


இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் கலந்துரையாடி தீர்மானத்துக்கு வர வேண்டும் எனவும் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார்.


மாநாயக்க தேரர்கள் நாடு பிளவுபடும் என அச்சப்படுகின்றனர் - இதனை முதலில் தீர்க்கவேண்டும் - கரு ஜயசூரிய 13வது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்தினால் நாடு பிளவுப்படும் என்ற சந்தேகம் மாநாயக்க தேரர்களுக்கு ஏற்பட்டுள்ளதாக முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார்.கண்டிக்குச் சென்று மதவழிபாடுகளில் ஈடுபட்டப் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே இதனை அவர் தெரிவித்திருந்தார்.13ஆவது திருத்தச் சட்டம் என்பது எமது அரசியலமைப்பில் உள்ள ஒரு பகுதி.எனினும், இதனால் நாடு பிளவுப்படும் என்கிற சந்தேகம் மாநாயக்க தேரர்களுக்கு ஏற்பட்டுள்ளது.இது தொடர்பில் கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடி, நாடாளுமன்றத்தில் தீர்மானிக்க வேண்டும் தற்போதைய அரசாங்கத்தின் வரிக் கொள்கைகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென தெரிவிக்கும் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி, நியாயமான முறையில் வரி அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். உள்ளூராட்சி மன்ற தேர்தலால் நாட்டில் ஆட்சி மாற்றம் இடம்பெறப்போவதில்லை. எவ்வாறாயினும் ஒரு தரப்பினர் தேர்தலுக்கு நிதியில்லை எனக் கூற மற்றொரு தரப்பினர் தேர்தலை நிச்சியமாக நடத்தியே ஆக வேண்டும் என கூறுகின்றனர்.எனினும், பெரும்பாலானவர்கள் ஜனாதிபதி அல்லது நாடாளுமன்ற தேர்தலை நடத்த வேண்டும் என கூறுகிறார்கள். இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் கலந்துரையாடி தீர்மானத்துக்கு வர வேண்டும் எனவும் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement