இந்திய திரையுலகம் கடந்த சில் மாதங்களாக பல்வேறு முக்கிய பிரபலங்களின் திடீர் இழப்பால் கடும் சோகங்கத்தில் ஆழ்ந்துள்ளது.
இந்நிலையில் நேற்றையதினம் மற்றுமோர் முக்கிய பிரபலமும் உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவராகவும், நடிகராகவும்
திகழ்ந்து வருபவர் சேகர். இவர் 2006 ஆம் ஆண்டு ஆர்யா மற்றும் பரத்
நடிப்பில் வெளியான 'பட்டியல்' என்ற திரைப்படத்தை தயாரித்ததன் மூலம்
தயாரிப்பாளராக அறிமுகமானார்.
இதனையடுத்தே இவர் பட்டியல் சேகர் என
அழைக்கப்பட்டார். அத்தோடு 'ராஜதந்திரம்' படத்தில் வில்லனாகவும் நடித்து
ரசிகர்களை மிரள வைத்தார்.
மேலும், இவர் நடிகர், தயாரிப்பாளர் என்பதை தாண்டி, தமிழ் சினிமாவில் முன்னணி
இயக்குநரான விஷ்ணுவர்தன் மற்றும் நடிகர் கிருஷ்ணாவின் தந்தை ஆவார். 63
வயதாகும் இவர் , கடந்த சில மாதங்களாகவே உடல்நல குறைவு காரணமாக அவதிப்பட்டு
வந்திருந்தார். இதனைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனை ஒன்றில்
அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், நேற்று மாலை சிகிச்சை பலனின்றி இவர் உயிர் இழந்துள்ளார்.
இவரது
இறப்பானது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவரின் உடல் தற்போது
கோடம்பாக்கத்தில் உள்ள அவருடைய வீட்டில், அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தொடர்ந்து தங்களின் அஞ்சலியை
செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலம் திடீர் உயிரிழப்பு. ரசிகர்கள் அதிர்ச்சி.SamugamMedia இந்திய திரையுலகம் கடந்த சில் மாதங்களாக பல்வேறு முக்கிய பிரபலங்களின் திடீர் இழப்பால் கடும் சோகங்கத்தில் ஆழ்ந்துள்ளது.இந்நிலையில் நேற்றையதினம் மற்றுமோர் முக்கிய பிரபலமும் உயிரிழந்துள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவராகவும், நடிகராகவும்
திகழ்ந்து வருபவர் சேகர். இவர் 2006 ஆம் ஆண்டு ஆர்யா மற்றும் பரத்
நடிப்பில் வெளியான 'பட்டியல்' என்ற திரைப்படத்தை தயாரித்ததன் மூலம்
தயாரிப்பாளராக அறிமுகமானார். இதனையடுத்தே இவர் பட்டியல் சேகர் என
அழைக்கப்பட்டார். அத்தோடு 'ராஜதந்திரம்' படத்தில் வில்லனாகவும் நடித்து
ரசிகர்களை மிரள வைத்தார். மேலும், இவர் நடிகர், தயாரிப்பாளர் என்பதை தாண்டி, தமிழ் சினிமாவில் முன்னணி
இயக்குநரான விஷ்ணுவர்தன் மற்றும் நடிகர் கிருஷ்ணாவின் தந்தை ஆவார். 63
வயதாகும் இவர் , கடந்த சில மாதங்களாகவே உடல்நல குறைவு காரணமாக அவதிப்பட்டு
வந்திருந்தார். இதனைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனை ஒன்றில்
அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று மாலை சிகிச்சை பலனின்றி இவர் உயிர் இழந்துள்ளார். இவரது
இறப்பானது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவரின் உடல் தற்போது
கோடம்பாக்கத்தில் உள்ள அவருடைய வீட்டில், அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தொடர்ந்து தங்களின் அஞ்சலியை
செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.