பொலிஸார் மீது குண்டு வீச முயன்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என மாளிகாவத்தை பொலிஸார் தெரிவித்தார்.
மாளிகாவத்தை ஆப்பிள் தோட்டம் பகுதியில் வெறிச்சோடிய வீடொன்றில் பதுங்கியிருந்த நபரை கைது செய்வதற்காக அங்கு சென்ற மாளிகாவத்தை பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழு மீது வெடிகுண்டு வீச முயன்றதாக கூறப்படும் நபர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வெடிகுண்டு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும்,
அது இந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது எனவும் மாளிகாவத்தை பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மாளிகாவத்தை பகுதியை சேர்ந்த 48 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.