• May 04 2024

பாதையில் வீழ்ந்த பாரிய மரம்; கொழும்பு - மலையக ரயில் சேவையில் தாமதம்! samugammedia

Chithra / Oct 15th 2023, 3:50 pm
image

Advertisement

 

மலையகத்தில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக வட்டவளை மற்றும் கலபட ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில்  பாதையில் பாரிய மரமொன்று வீழ்ந்துள்ளதால் மலையகப் பாதையில் ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

இன்று பகல் 1.00 மணியளவில் ரயில்  பாதையில் மரம் வீழ்ந்துள்ளதாகவும், இதன் காரணமாக கொழும்பு, கோட்டை ரயில்  நிலையத்திலிருந்து பதுளை நோக்கி காலை 8:30 மணியளவில் பயணித்த உதார மெனிகே  கடுகதி ரயில் கலபட ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.  

பாதையில் வீழ்ந்துள்ள மரத்தை அகற்றிய பின்னர் ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பும் எனவும் அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பாதையில் வீழ்ந்த பாரிய மரம்; கொழும்பு - மலையக ரயில் சேவையில் தாமதம் samugammedia  மலையகத்தில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக வட்டவளை மற்றும் கலபட ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில்  பாதையில் பாரிய மரமொன்று வீழ்ந்துள்ளதால் மலையகப் பாதையில் ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.இன்று பகல் 1.00 மணியளவில் ரயில்  பாதையில் மரம் வீழ்ந்துள்ளதாகவும், இதன் காரணமாக கொழும்பு, கோட்டை ரயில்  நிலையத்திலிருந்து பதுளை நோக்கி காலை 8:30 மணியளவில் பயணித்த உதார மெனிகே  கடுகதி ரயில் கலபட ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.  பாதையில் வீழ்ந்துள்ள மரத்தை அகற்றிய பின்னர் ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பும் எனவும் அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement