வீட்டின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் இனந்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
அக்கறையான் பொலீஸ் பிரிவுக்கு உட்பட்ட கருத்தாஸ் குடியிருப்பு பகுதியில் இன்று அதிகாலை 1:30 மணி அளவில் இனந்தெரியாத நபர்களினால் வீடொன்றின் கண்ணாடி மீது கல்வீச்சு நடத்தப்பட்டுள்ளதுடன் வீட்டு முற்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வீட்டு உரிமையாளர்கள் சத்தம் கேட்டு வெளியில் வந்து பார்த்த பொழுது மோட்டார் சைக்கிள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக அக்கறையான் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளதுடன் அக்கறையான் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வீட்டின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் தீக்கிரை.samugammedia வீட்டின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் இனந்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,அக்கறையான் பொலீஸ் பிரிவுக்கு உட்பட்ட கருத்தாஸ் குடியிருப்பு பகுதியில் இன்று அதிகாலை 1:30 மணி அளவில் இனந்தெரியாத நபர்களினால் வீடொன்றின் கண்ணாடி மீது கல்வீச்சு நடத்தப்பட்டுள்ளதுடன் வீட்டு முற்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் வீட்டு உரிமையாளர்கள் சத்தம் கேட்டு வெளியில் வந்து பார்த்த பொழுது மோட்டார் சைக்கிள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.இச்சம்பவம் தொடர்பாக அக்கறையான் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளதுடன் அக்கறையான் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.