யாழ் புங்குடுதீவுப் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து சட்டவிரோதமாக மின் இணைப்பை பிறிதொரு வீட்டுக்கு வழங்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.
மின்மானியை சேதப்படுத்தி அயல் வீட்டுக்கு மின்சாரத்தை குறித்த நபர் வழங்கி வந்துள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலுக்கு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.