ரணில் தலைமையிலான அரசாங்கம் இதுவரை போதை பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களை கைது செய்வதற்கான எந்தவொரு வேலைத்திட்டத்தையும் ஆரம்பிக்கவில்லை என ஜக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா குற்றம் சுமத்தியுள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் அவர் இவ்வாறு குற்றம் சுமத்தியிருந்தார்.
போதைபொருள் பாவனையில் ஈடுபட்டவர்களை புனர்வாழ்வழிப்பதை விடுத்து இதனை நாட்டிற்கு கொண்டு வருபவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார்.
ஆனால் இதுவரையில் அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.
கட்ந்த காலத்தில் கஞ்சிபானை என போதை பொருள் கடத்தல் காரர் தப்பிச்சென்றுள்ளார்.
இந்த நாட்டில் உளவுபிரிவு ஒன்று உள்ளது. இந்த அரசாங்கம் தாம் உயர்மட்டத்தில் இருப்பதாக குறிப்பிடுகின்றது.
தற்போது உளவு பிரின் தலைவரை கடந்த காலத்தில் நான் ஒதுக்கி வைத்திருந்தேன். ஆனால் தற்போது மீண்டும் அவரே உளவு பிரிவிற்கு தலைவராக உள்ளார்.
நாட்டில் ஹெரோயின் போதை பொருளை விடவும் ஜஸ் பேதைபொருளே தீவிரமாக பரவியுள்ளது.
இதற்கு காரணம் உண்டு. ஹெரேனை ஒரு தடவை பயன்படுத்த 3000 ரூபா தேவைப்படுகின்றது. ஆனால் ஜஸ் போதையை பயன்படுத்த 500 ரூபா போதுமாகவுள்ளது. இதுவே மாணவர் மத்தியில் இதன் பயன்பாடு அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது.
இதற்கு அடிமையானவர்களை புனர்வாழ்வளிப்பதை விடவும் இதன் விற்பனை மற்றும் நாட்டிற்கு வரும் வழிகளை தடுக்கவேண்டுமென சரத் பொன்சேகா சபையில் வலியுறுத்தியிருந்தார்.
நாட்டில் அதிகரிக்கும் போதைப்பொருள் பாவனை - வேடிக்கை பார்க்கும் ரணில் அரசு பொன்சேகா குற்றச்சாட்டு ரணில் தலைமையிலான அரசாங்கம் இதுவரை போதை பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களை கைது செய்வதற்கான எந்தவொரு வேலைத்திட்டத்தையும் ஆரம்பிக்கவில்லை என ஜக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா குற்றம் சுமத்தியுள்ளார்.இன்று நாடாளுமன்றத்தில் அவர் இவ்வாறு குற்றம் சுமத்தியிருந்தார்.போதைபொருள் பாவனையில் ஈடுபட்டவர்களை புனர்வாழ்வழிப்பதை விடுத்து இதனை நாட்டிற்கு கொண்டு வருபவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார்.ஆனால் இதுவரையில் அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.கட்ந்த காலத்தில் கஞ்சிபானை என போதை பொருள் கடத்தல் காரர் தப்பிச்சென்றுள்ளார்.இந்த நாட்டில் உளவுபிரிவு ஒன்று உள்ளது. இந்த அரசாங்கம் தாம் உயர்மட்டத்தில் இருப்பதாக குறிப்பிடுகின்றது.தற்போது உளவு பிரின் தலைவரை கடந்த காலத்தில் நான் ஒதுக்கி வைத்திருந்தேன். ஆனால் தற்போது மீண்டும் அவரே உளவு பிரிவிற்கு தலைவராக உள்ளார்.நாட்டில் ஹெரோயின் போதை பொருளை விடவும் ஜஸ் பேதைபொருளே தீவிரமாக பரவியுள்ளது.இதற்கு காரணம் உண்டு. ஹெரேனை ஒரு தடவை பயன்படுத்த 3000 ரூபா தேவைப்படுகின்றது. ஆனால் ஜஸ் போதையை பயன்படுத்த 500 ரூபா போதுமாகவுள்ளது. இதுவே மாணவர் மத்தியில் இதன் பயன்பாடு அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது.இதற்கு அடிமையானவர்களை புனர்வாழ்வளிப்பதை விடவும் இதன் விற்பனை மற்றும் நாட்டிற்கு வரும் வழிகளை தடுக்கவேண்டுமென சரத் பொன்சேகா சபையில் வலியுறுத்தியிருந்தார்.