• May 19 2024

யாழில் தமிழரசு கட்சியின் முதலாவது தலைவர் தர்மலிங்கத்தின் சிலை திறப்பு!

Sharmi / Jan 23rd 2023, 10:44 am
image

Advertisement

சுன்னாகம் வலிகாமம் தெற்கு பிரதேச சபையின்  எற்பாட்டில் முன்னாள் உடுவில் கிராம சபைத்தலைவரும்இ இலங்கை தமிழரசு கட்சியின் முதலாவது தலைவருமான மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் விஸ்வநாதர் தர்மலிங்கத்தின் திருவுருவசிலை திறப்பு நிகழ்வு இன்று சுன்னாகம் வலிகாமம் தெற்கு பிரதேச சபைக்கு அருகாமையில் திறந்துவைக்கப்பட்டது.

சுன்னாகம் வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் கருணாகரன் தர்ஷன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர்  சி.சிறிசற்குணராஜா ,தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் ஆகியோர் கலந்து கொண்டு திருவுசிலையினை திறந்து வைத்தனர்.

இதில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் சோ.மாவை சேனாதிராஜா, யாழ் தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான தலைவர் ஆறுதிருமுருகன்,  முன்னாள் மாகாண சபையின் உறுப்பினர் பா.கஜதீபன், சுன்னாகம் வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.

யாழில் தமிழரசு கட்சியின் முதலாவது தலைவர் தர்மலிங்கத்தின் சிலை திறப்பு சுன்னாகம் வலிகாமம் தெற்கு பிரதேச சபையின்  எற்பாட்டில் முன்னாள் உடுவில் கிராம சபைத்தலைவரும்இ இலங்கை தமிழரசு கட்சியின் முதலாவது தலைவருமான மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் விஸ்வநாதர் தர்மலிங்கத்தின் திருவுருவசிலை திறப்பு நிகழ்வு இன்று சுன்னாகம் வலிகாமம் தெற்கு பிரதேச சபைக்கு அருகாமையில் திறந்துவைக்கப்பட்டது.சுன்னாகம் வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் கருணாகரன் தர்ஷன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர்  சி.சிறிசற்குணராஜா ,தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் ஆகியோர் கலந்து கொண்டு திருவுசிலையினை திறந்து வைத்தனர்.இதில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் சோ.மாவை சேனாதிராஜா, யாழ் தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான தலைவர் ஆறுதிருமுருகன்,  முன்னாள் மாகாண சபையின் உறுப்பினர் பா.கஜதீபன், சுன்னாகம் வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement