பசறையில் நபரொருவர் மரத்தில் இருந்து கீழே தவறி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
பசறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹல்காபத்தன பாலாகொல்ல கோணகல பகுதியில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.
பலாக்காய் பறிப்பதற்காக செண்பக மரம் ஒன்றில் ஏறி பலா மரத்திற்கு மாறுகையிலேயே தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் இவரை உடனடியாக பசறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர் 44 வயதுடைய ஹல்காபத்தன பாலாகொல்ல கோணகல பகுதியைச் சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது.
மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பலாக்காய் பறிப்பதற்காக மரத்தில் ஏறியவருக்கு நேர்ந்த சோகம். பரிதாபமாக உயிரிழப்பு. samugammedia பசறையில் நபரொருவர் மரத்தில் இருந்து கீழே தவறி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர். பசறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹல்காபத்தன பாலாகொல்ல கோணகல பகுதியில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.பலாக்காய் பறிப்பதற்காக செண்பக மரம் ஒன்றில் ஏறி பலா மரத்திற்கு மாறுகையிலேயே தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந் நிலையில் இவரை உடனடியாக பசறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.உயிரிழந்த நபர் 44 வயதுடைய ஹல்காபத்தன பாலாகொல்ல கோணகல பகுதியைச் சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது.மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.