• May 03 2024

டிக்டாக் செய்த யாழ்ப்பாண பையனுக்கு இறுதியில் நடந்த விபரீதம்!

Sharmi / Dec 1st 2022, 8:03 pm
image

Advertisement

யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் துறைமுகத்தில் நண்பருடன் மோட்டார் சைக்கிளில்  டிக்டாக் காணொளி எடுக்க முனைந்த இளைஞரொருவர் கடலில் வீழ்ந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. 

இன்று மாலை(01) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் பருத்தித்துறையை சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கடலில் வீழ்ந்துள்ளார். 

இரண்டு நண்பர்கள் இணைந்து மோட்டார் சைக்கிளில் டிக்டாக் எடுக்க முனைந்த போது மோட்டார் வண்டியுடன் ஒருவர் கடலுக்குள்ளும் மற்றையவர் வெளியிலும் குதித்துள்ளனர். 

அதனையடுத்து அவ்விடத்தில் கூடிய இளைஞர்களும், பாதுகாப்பு தரப்பினரும் கடலில் வீழ்ந்த இளைஞரை மீட்டெடுத்ததுடன் மோட்டார் சைக்கிளையும் மீட்டு கரைசேர்த்தனர். 

தெய்வாதீனமாக இரண்டு இளைஞர்களுமே உயிர் தப்பியுள்ளனர்.




டிக்டாக் செய்த யாழ்ப்பாண பையனுக்கு இறுதியில் நடந்த விபரீதம் யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் துறைமுகத்தில் நண்பருடன் மோட்டார் சைக்கிளில்  டிக்டாக் காணொளி எடுக்க முனைந்த இளைஞரொருவர் கடலில் வீழ்ந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இன்று மாலை(01) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணம் பருத்தித்துறையை சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கடலில் வீழ்ந்துள்ளார். இரண்டு நண்பர்கள் இணைந்து மோட்டார் சைக்கிளில் டிக்டாக் எடுக்க முனைந்த போது மோட்டார் வண்டியுடன் ஒருவர் கடலுக்குள்ளும் மற்றையவர் வெளியிலும் குதித்துள்ளனர். அதனையடுத்து அவ்விடத்தில் கூடிய இளைஞர்களும், பாதுகாப்பு தரப்பினரும் கடலில் வீழ்ந்த இளைஞரை மீட்டெடுத்ததுடன் மோட்டார் சைக்கிளையும் மீட்டு கரைசேர்த்தனர். தெய்வாதீனமாக இரண்டு இளைஞர்களுமே உயிர் தப்பியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement