• Sep 20 2024

பெண்களை பலாத்காரம் செய்ய சொல்லி ரசித்த மனைவி! வெளிவரும் திடுக்கிடும் உண்மைகள்!!

crownson / Dec 27th 2022, 12:31 pm
image

Advertisement

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் ரஷ்ய படைகள் உக்ரைன் நாட்டின் பல பகுதிகலில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்த சூழலில் ரஷ்ய நாட்டு ராணுவ வீரரின் மனைவி தன் கணவரிடம் தாக்குதல் நடத்தும் இடத்தில் உள்ள உக்ரைன் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்யுமாறு தொலைபேசியின் வழியாக கூறியுள்ளார்.

இந்த ஆடியோ வைரலாக பரவ அவரை உக்ரேனிய போலீசார் தேடி வந்தனர்.

 27 வயதான ரோமன் பைகோவ்ஸ்கி என அடையாளம் காணப்பட்ட ரஷிய வீரரிடம் தொலைபேசி அழைப்பில் பேசிய பெண், அங்கு  உக்ரேனிய பெண்கள்  இருக்கிறார்கள்.

அவர்களை கற்பழி. என்னிடம் எதுவும் சொல்லாதே, புரிந்துகொள்.

இதனால் எனக்கு எதுவும் தெரியவராது. இதற்கு நான் அனுமதி தருகிறேன்.

ஆனால் பாதுகாப்பு உபகரணத்தை பயன்படுத்து என்று சொல்லிவிட்டு சிரித்துள்ளார்.

இந்த குரல் பதிவு வைரலாக பரவத் தொடங்கியது.

இதை கேட்டு பாதுகாப்புப் படையினர் மிரண்டு போயினர்.

பின்னர் ரேடியோ லிபர்ட்டியில் உள்ள புலனாய்வுப் பத்திரிகையாளர்கள் உக்ரேனிய சட்ட அமலாக்கத்துடன் இணைந்து இதை பேசிய பெண் யார் என்று தேடத் தொடங்கியுள்ளனர்.

புலனாய்வு குழு, அழைப்பில் தொடர்புடைய தொலைபேசியைக் தொடர்ந்து கண்காணித்தது.

அந்த தொலைபேசிக்கு வந்த எண்களில் ஒன்று கெர்சன் பகுதியில் ஏப்ரல் மாதம் கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் அந்த அழைப்பில் இருந்த இரண்டு தொலைபேசி எண்களும் ரஷ்யாவின் VKontakte  சமூக வலைப்பின்னலுடன் இணைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

அதன் பின்னர் அந்த பதிவில் பேசிய நபர்களில்  ஒன்று ரோமன் பைகோவ்ஸ்கி (27), மற்றொன்று அவரது மனைவி ஓல்கா பைகோவ்ஸ்கயா என்று அடையாளம் காணப்பட்டது.

ரோமானின் கணக்கு சமூகவலைத்தளத்தில் இருந்து பொதுமக்களுக்கு மறைக்கப்பட்ட நிலையில், அவரது நண்பர் ஒருவரால் பதிவேற்றப்பட்ட போஸ்ட் வைத்து பத்திரிகையாளர்கள் அவரது புகைப்படங்களைக் கண்டறிந்தனர்.

பின்னர் அவரது மனைவி ஓல்கா பைகோவ்ஸ்கயாவை உக்ரேனிய புலனாய்வு அமைப்புகள் மாநில, மாநிலங்களுக்கு இடையேயான மற்றும் சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்களை பலாத்காரம் செய்ய சொல்லி ரசித்த மனைவி வெளிவரும் திடுக்கிடும் உண்மைகள் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் ரஷ்ய படைகள் உக்ரைன் நாட்டின் பல பகுதிகலில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த சூழலில் ரஷ்ய நாட்டு ராணுவ வீரரின் மனைவி தன் கணவரிடம் தாக்குதல் நடத்தும் இடத்தில் உள்ள உக்ரைன் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்யுமாறு தொலைபேசியின் வழியாக கூறியுள்ளார். இந்த ஆடியோ வைரலாக பரவ அவரை உக்ரேனிய போலீசார் தேடி வந்தனர். 27 வயதான ரோமன் பைகோவ்ஸ்கி என அடையாளம் காணப்பட்ட ரஷிய வீரரிடம் தொலைபேசி அழைப்பில் பேசிய பெண், அங்கு  உக்ரேனிய பெண்கள்  இருக்கிறார்கள். அவர்களை கற்பழி. என்னிடம் எதுவும் சொல்லாதே, புரிந்துகொள். இதனால் எனக்கு எதுவும் தெரியவராது. இதற்கு நான் அனுமதி தருகிறேன். ஆனால் பாதுகாப்பு உபகரணத்தை பயன்படுத்து என்று சொல்லிவிட்டு சிரித்துள்ளார்.இந்த குரல் பதிவு வைரலாக பரவத் தொடங்கியது. இதை கேட்டு பாதுகாப்புப் படையினர் மிரண்டு போயினர். பின்னர் ரேடியோ லிபர்ட்டியில் உள்ள புலனாய்வுப் பத்திரிகையாளர்கள் உக்ரேனிய சட்ட அமலாக்கத்துடன் இணைந்து இதை பேசிய பெண் யார் என்று தேடத் தொடங்கியுள்ளனர்.புலனாய்வு குழு, அழைப்பில் தொடர்புடைய தொலைபேசியைக் தொடர்ந்து கண்காணித்தது. அந்த தொலைபேசிக்கு வந்த எண்களில் ஒன்று கெர்சன் பகுதியில் ஏப்ரல் மாதம் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அந்த அழைப்பில் இருந்த இரண்டு தொலைபேசி எண்களும் ரஷ்யாவின் VKontakte  சமூக வலைப்பின்னலுடன் இணைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.அதன் பின்னர் அந்த பதிவில் பேசிய நபர்களில்  ஒன்று ரோமன் பைகோவ்ஸ்கி (27), மற்றொன்று அவரது மனைவி ஓல்கா பைகோவ்ஸ்கயா என்று அடையாளம் காணப்பட்டது.ரோமானின் கணக்கு சமூகவலைத்தளத்தில் இருந்து பொதுமக்களுக்கு மறைக்கப்பட்ட நிலையில், அவரது நண்பர் ஒருவரால் பதிவேற்றப்பட்ட போஸ்ட் வைத்து பத்திரிகையாளர்கள் அவரது புகைப்படங்களைக் கண்டறிந்தனர்.பின்னர் அவரது மனைவி ஓல்கா பைகோவ்ஸ்கயாவை உக்ரேனிய புலனாய்வு அமைப்புகள் மாநில, மாநிலங்களுக்கு இடையேயான மற்றும் சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement