சபாநாயகரின் உத்தியோகப்பூர்வ வாசஸ்தலத்திற்கு முன்பாக களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த இரும்புக் குழாய்களை கொள்ளையிட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
45 இலட்சம் பெறுமதியான இரும்புக்குழாய்களே கொள்ளையிடப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த காவல் துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.