மடுமாதாவின் முடிசூட்டுவிழாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மடுமாதா திருச்சொருபம் தற்போது யாழ் மறைமாவட்ட பங்குகளுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றது.
இந்நிலையில் மருத மடு அன்னையின் திருச்சொருப பவனி நெல்லியடி கரவெட்டி புனித அந்தோனியார் ஆலயத்தில் நேற்றையதினம்(17) பிற்பகல் 5 மணிக்கு வருகைதந்து அங்கு சிறப்பு வழிபாடுகளும் இடம்பெற்ற நிலையில் இன்று(18) காலை 7 மணியளவில் அங்கிருந்து புறப்பட்ட மருதமடு மாதா திருச்சொருப பவனி காலை 8 மணியளவில் பருத்தித்துறை சக்கோட்டை புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்திற்கு வருகைதந்து அங்கு சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன.