மடத்துகம நகருக்கு அருகில் உள்ள சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் இருந்த மூன்று சிறுமிகள் அந்த பராமரிப்பு நிலையத்திலிருந்து தப்பி சென்றுள்ளதாக மடத்துகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
15, 16 மற்றும் 17 வயதுடைய மூன்று சிறுமிகளே இவ்வாறு தப்பி ஓடிவிட்டனர்.
இவர்கள் மூவரும் கலென்பிடுனுவெவ, நொச்சியாகம மற்றும் தலாவ பிரதேசங்களில் வசிக்கும் சிறுமிகள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நீதிமன்ற உத்தரவின் பேரில், இந்த மூன்று சிறுமிகளும் இந்த பராமரிப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்குது.