மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபசார விடுதி சுற்றிவளைக்கப்பட்டு மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்கிஸை பகுதியில் உள்ள இந்த இடத்தில் நேற்று மாலை கல்கிஸை பொலிஸார் சோதனை நடத்தியபோதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 27, 41 மற்றும் 67 வயதுடைய பயாகல, நொச்சியாகம மற்றும் கடவத்தை பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.
இவர்கள் இன்று வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.