விசேட அதிரடிப்படையின் கோனஹேன முகாமின் பொலிஸ் பரிசோதகர் தேசப்பிரிய உள்ளிட்ட அதிகாரிகள் குழு 9 மில்லிமீற்றர் தானியங்கி துப்பாக்கிகள் இரண்டு , மற்றும் 10 ரவைகளுடன் மூன்று சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்கள் கட்டான , பன்னல மற்றும் நீர்கொழும்பு பிரதேசத்தில் வசிப்பவர்கள் ஆவர்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் இவர்கள் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
இந்த துப்பாக்கிகள் திட்டமிட்ட குற்றங்கள் புரியும் குழுவினரால் அனுப்பப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.