• May 17 2024

புகையிரதத்துடன் முச்சக்கரவண்டி மோதுண்டு கோர விபத்து..! - ஒருவர் பலி...! - மட்டக்களப்பில் சம்பவம் samugammedia

Chithra / Oct 3rd 2023, 2:44 pm
image

Advertisement


மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் புகையிரதத்தில் முச்சக்கரவண்டியோன்று மோதுண்டதில்  ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந் நிலையில் பாதுகாப்புக்கடமையில்லாத நிலையில் இடம்பெறும் விபத்துகள் குறித்து பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இன்று முற்பகல் மட்டக்களப்பில் இருந்து மாகோ சந்தி புகையிரத நிலையத்தை நோக்கி சென்ற புகையிரதத்திலேயே  முச்சக்கர வண்டி மோதுண்டதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பத்தில் ஏறாவூர் பழைய சந்தை வீதியைச் சேர்ந்த 40 வயதுடைய  03 பிள்ளைகளின் தந்தையான அப்துல் ரஹமான் றமீஸ் என்பவரே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

சடலம் ஏறாவூர் புகையிரத நிலையத்தில் வைக்கப்பட்டு தற்போது பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மோற்கொண்டு வருகின்றனர்.


புகையிரதத்துடன் முச்சக்கரவண்டி மோதுண்டு கோர விபத்து. - ஒருவர் பலி. - மட்டக்களப்பில் சம்பவம் samugammedia மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் புகையிரதத்தில் முச்சக்கரவண்டியோன்று மோதுண்டதில்  ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந் நிலையில் பாதுகாப்புக்கடமையில்லாத நிலையில் இடம்பெறும் விபத்துகள் குறித்து பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.இன்று முற்பகல் மட்டக்களப்பில் இருந்து மாகோ சந்தி புகையிரத நிலையத்தை நோக்கி சென்ற புகையிரதத்திலேயே  முச்சக்கர வண்டி மோதுண்டதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.சம்பத்தில் ஏறாவூர் பழைய சந்தை வீதியைச் சேர்ந்த 40 வயதுடைய  03 பிள்ளைகளின் தந்தையான அப்துல் ரஹமான் றமீஸ் என்பவரே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.சடலம் ஏறாவூர் புகையிரத நிலையத்தில் வைக்கப்பட்டு தற்போது பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மோற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement