நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும்
யாழ்ப்பாணத்தில் சீரான வானிலை நிலவ வாய்ப்புள்ளதாகவும் வளிமண்டலவியல்
திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்றைய தினம் (26.05.2023) மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய
மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை
பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வடமேல் மாகாணத்திலும் மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில்
மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்
காணப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத்
தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு
வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்
* அனுராதபுரம் - பிரதானமாகச் சீரான வானிலை
* மட்டக்களப்பு - பி.ப. 4.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்
* கொழும்பு - அடிக்கடி மழை பெய்யும்
காலி - அடிக்கடி மழை பெய்யும்
* யாழ்ப்பாணம் - பிரதானமாகச் சீரான வானிலை
* கண்டி - அடிக்கடி மழை பெய்யும்
* நுவரெலியா - பி.ப. 4.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்
* இரத்தினபுரி - அடிக்கடி மழை பெய்யும்
* திருகோணமலை - பி.ப. 4.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழைபெய்யும்
* மன்னார் - பிரதானமாகச் சீரான வானிலை என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று இடியுடன் கூடிய மழை - வளிமண்டலவியல் திணைக்களம் விசேட அறிவிப்பு.samugammedia நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும்
யாழ்ப்பாணத்தில் சீரான வானிலை நிலவ வாய்ப்புள்ளதாகவும் வளிமண்டலவியல்
திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்றைய தினம் (26.05.2023) மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய
மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை
பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வடமேல் மாகாணத்திலும் மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில்
மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்
காணப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத்
தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு
வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்
* அனுராதபுரம் - பிரதானமாகச் சீரான வானிலை
* மட்டக்களப்பு - பி.ப. 4.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்
* கொழும்பு - அடிக்கடி மழை பெய்யும்
காலி - அடிக்கடி மழை பெய்யும்
* யாழ்ப்பாணம் - பிரதானமாகச் சீரான வானிலை
* கண்டி - அடிக்கடி மழை பெய்யும்
* நுவரெலியா - பி.ப. 4.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்
* இரத்தினபுரி - அடிக்கடி மழை பெய்யும்
* திருகோணமலை - பி.ப. 4.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழைபெய்யும்
* மன்னார் - பிரதானமாகச் சீரான வானிலை என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.